| மண்மகள் இலம்பகம் |
1228 |
|
|
|
(வி - ம்.) கோவிந்தன் ஏமாங்கதத்திலே இராசமாபுரநகரின் மதிற்புறத்திலே தங்கினான்.
|
( 71 ) |
| 2173 |
போக மகளிர் வலக்கண்க | |
டுடித்த பொல்லாக் கனாக்கண்டா | |
ராக மன்னற் கொளிமழுங்கிற் | |
றஞ்சத் தக்க குரலினாற் | |
கூகை கோயிற் பகற்குழறக் | |
கொற்ற முரசம் பாடவிந்து | |
மாக நெய்த்தோர் சொரிந்தெங்கு | |
மண்ணும் விண்ணு மதிர்ந்தவே. | |
|
|
(இ - ள்.) போக மகளிர் வலக்கண்கள் துடித்த - கட்டியங்காரனுடைய காமக் கிழத்தியரின் வலக்கண்கள் துடித்தன; பொல்லாக் கனாக் கண்டார் - அவர்கள் தீய கனவுகளைக் கண்டனர்; மன்னற்கு ஆகம் ஒளி மழுங்கிற்று - கட்டியங்காரனுக்கு மேனி ஒளி மயங்கியது; கூகை கோயில் பகல் அஞ்சத்தக்க குரலினாற் குழற - கூகையானது, அரண்மனையிலே பகற் காலத்திலே அஞ்சத் தக்க குரலினாற் குழறிக் கூவ; கொற்றம் முரசம். பாடு அவிந்து - வெற்றி முரசம் ஒலி அவிய; மாகம் நெய்த்தோர் சொரிந்து - வானத்தினின்றும் குருதி மழை பெய்ய; மண்ணும் விண்ணும் எங்கும் அதிர்ந்த - நிலமும் வானமும் அந்நாடெங்கும் அதிர்ந்தன.
|
|
(வி - ம்.) கோவிந்தன் மகிற் புறத்தே தங்கியபின் கட்டியங்காரனுக்குற்ற தீய நிமித்தங்கள் கூறப்பட்டன. நிலமதிர்தல், நிலநடுக்கம்; வானதிர்தல் : முகிலின்றி யிடித்தல்.
|
( 72 ) |
| 2174 |
கூற்றம் வந்து புறத்திறுத்த | |
தறியான் கொழும்பொ னுலகாள்வான் | |
வீற்றிங் கிருந்தே னெனமகிழ்ந்து | |
வென்றி வேழ மிருநூறுங் | |
காற்றிற் பரிக்குந் தோ்நூறுங் | |
கடுங்கா லிவுளி யாயிரமும் | |
போற்றி விடுத்தான் புனைசெம்பொற் | |
படையே யணிந்து புனைபூணான். | |
|