பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1228 

   (வி - ம்.) கோவிந்தன் ஏமாங்கதத்திலே இராசமாபுரநகரின் மதிற்புறத்திலே தங்கினான்.

( 71 )
2173 போக மகளிர் வலக்கண்க
  டுடித்த பொல்லாக் கனாக்கண்டா
ராக மன்னற் கொளிமழுங்கிற்
  றஞ்சத் தக்க குரலினாற்
கூகை கோயிற் பகற்குழறக்
  கொற்ற முரசம் பாடவிந்து
மாக நெய்த்தோர் சொரிந்தெங்கு
  மண்ணும் விண்ணு மதிர்ந்தவே.

   (இ - ள்.) போக மகளிர் வலக்கண்கள் துடித்த - கட்டியங்காரனுடைய காமக் கிழத்தியரின் வலக்கண்கள் துடித்தன; பொல்லாக் கனாக் கண்டார் - அவர்கள் தீய கனவுகளைக் கண்டனர்; மன்னற்கு ஆகம் ஒளி மழுங்கிற்று - கட்டியங்காரனுக்கு மேனி ஒளி மயங்கியது; கூகை கோயில் பகல் அஞ்சத்தக்க குரலினாற் குழற - கூகையானது, அரண்மனையிலே பகற் காலத்திலே அஞ்சத் தக்க குரலினாற் குழறிக் கூவ; கொற்றம் முரசம். பாடு அவிந்து - வெற்றி முரசம் ஒலி அவிய; மாகம் நெய்த்தோர் சொரிந்து - வானத்தினின்றும் குருதி மழை பெய்ய; மண்ணும் விண்ணும் எங்கும் அதிர்ந்த - நிலமும் வானமும் அந்நாடெங்கும் அதிர்ந்தன.

   (வி - ம்.) கோவிந்தன் மகிற் புறத்தே தங்கியபின் கட்டியங்காரனுக்குற்ற தீய நிமித்தங்கள் கூறப்பட்டன. நிலமதிர்தல், நிலநடுக்கம்; வானதிர்தல் : முகிலின்றி யிடித்தல்.

( 72 )
2174 கூற்றம் வந்து புறத்திறுத்த
  தறியான் கொழும்பொ னுலகாள்வான்
வீற்றிங் கிருந்தே னெனமகிழ்ந்து
  வென்றி வேழ மிருநூறுங்
காற்றிற் பரிக்குந் தோ்நூறுங்
  கடுங்கா லிவுளி யாயிரமும்
போற்றி விடுத்தான் புனைசெம்பொற்
  படையே யணிந்து புனைபூணான்.

   (இ - ள்.) கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான் - கூற்றுவன் வந்து மதிலின் வெளியே தங்கியதை அறியாத கட்டியங்காரன்; கொழும் பொன் உலகு ஆள்வான் இங்கு வீற்றிருந்தேன் என மகிழ்ந்து - வளமிகும் செல்வம் நிறைந்த