பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1240 

விரும்பி; விளைதவப் பெருமை ஓரார் - விளையும் தவப் பெருமை தமக்கில்லையென அறியாராய்; யாரும் வில்திறல் மயங்கி - எல்லோரும் வில் வலிமை முதலியன கலங்குதலின்; பொறியைக் களைகலார் - பொறியைக் களையாராக; ஆங்கு ஒர் ஆறுநாள் கழிந்த - ஆங்கே ஆறு நாட்கள் கழிவுற்றன.

   (வி - ம்.) உளைவனப்பு - பிடரிமயிரின் அழகு. வருமுலை : வினைத்தொகை. போகம் - நுகர்ச்சி. நன்மை விளைதற்குக் காரணமான தவத்தின் பெருமை என்க. மயங்கி - மயங்க.

( 92 )

வேறு

2194 பனைக்கை யானை மன்னர்
  பணியப் பைம்பொன் முடியிற்
கனைக்குஞ் சுரும்பார் மாலை
  கமழ மதுவுந் தேனு
நனைக்குங் கழலோன் சிறுவ
  னாம வெள்வேல் வலவ
னினைக்க லாகா வகையா
  னேரா ருயிர்மே லெழுந்தான்.

   (இ - ள்.) பனைக்கை யானை மன்னர் பணிய - பனைபோலுந் துதிக்கையையுடைய யானையையுடைய வேந்தர்கள் வணங்குதலால்; பைம்பொன் முடியில் கனைக்கும் சுரும்பும் தேனும் ஆர்மாலை கமழ - அம் மன்னரின் பொன் முடியிலே முரலும் சுரும்புகளும் தேனும் நிறைந்த மலர் மாலைகள் மணங்கமழ; மது நனைக்குங் கழலோன் சிறுவன் - தேன் நனைக்குங் கழலையுடையோன் ஆகிய சச்சந்தனின் மகன்; நாம வெள்வேல் வலவன் - அச்சுறுத்தும் வெள்ளிய வேலேந்திய வென்றியன்; நினைக்கல் ஆகா வகையால் நேரார் உயிர்மேல் எழுந்தான் - அவர் நினைக்க ஒண்ணாத வஞ்சனையாலே பகைவர் உயிரைக் கொள்ள எழுந்தான்.

   (வி - ம்.) 'மதுவும்' என்பதிலுள்ள உம்மையைச், 'சுரும்பும்' என அதனுடன் சேர்க்க. 'மதுவுந் தேனும், என்னுந் தொடரில், 'தேனும்' என்ற சொல்லை மாற்றிச், 'சுரும்பும் தேனும்' என இயைக்க.

( 93 )
2195 காரின் முழங்குங் களிறுங்
  கடலின் முழங்குந் தேரும்
போரின் முழங்கும் புரவிக்
  கடலும் புகைவாட் கடலுஞ்