| மண்மகள் இலம்பகம் |
1243 |
|
|
|
போல் வளைந்த, பூண்கட்டிய வில்லின் நாணைத் தட்டி ஒலியெழுப்பினான்; சேரார் நாள் உக்கன - பகைவரின் வாழ்நாட்கள் உதிர்ந்தன.
|
|
(வி - ம்.) 'குலாய சிலை, செய்யப்பட்ட சிலை, நாண்பூண்ட சிலை' எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
|
பிள்ளைகளையும் கட்டியங்காரனையும் சேரக் கோறலின் 'சேரார்' என்றார்.
|
( 97 ) |
வேறு
|
| 2199 |
கனிபடு மாழியி னாடன் | |
காரிகை கவற்ற வந்து | |
குனிசிலை தோற்ற மன்னர் | |
கொங்குகொப் புளிக்கு நீலப் | |
பனிமலர்க் காடு போன்றார் | |
படர்சிலை தொடாத வேந்த | |
ரினிதினின் மலர்ந்த வேரார் | |
தாமரைக் காடு போன்றார். | |
|
|
(இ - ள்.) கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற - கனியனைய இனிய மொழியாளின் அழகு (கேள்வியால்) வருத்துதலினாலே; வந்து குனிசிலை தோற்ற மன்னர் - வந்து வளைந்த வில்வலிமை யிழந்த மன்னர்கள்; கொங்கு கொப்புளிக்குங் பனி நீலமலர்க்காடு போன்றார் - தேனை உமிழும் குளிர்ந்த நீலமலர்ச் செறிவைப் போன்றனர்; படர்சிலை தொடாத வேந்தர் - துன்பந் தரும் அவ்வில்லைத் தொடாத மன்னர்கள்; இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரைக் காடு போன்றார் - இனிமையாக மலர்ந்த எழுச்சி நிறைந்த தாமரையின் நெருக்கத்தைப் போன்றனர்.
|
|
(வி - ம்.) சீவகனைக் கண்ட மன்னர் நிலை கூறியவாறு. வில்லைத் தொட்ட மன்னர் வாடினர்; வில்லைத் தொடாத மன்னர் மகிழ்ந்தனர்.
|
( 98 ) |
| 2200 |
போர்த்தகல் விசும்பில் வந்து | |
பொறித்திரி பன்றி மூன்று | |
நீர்த்தகப் புணர்ந்த போதி | |
னெடுந்தகை மூன்று மற்றுச் | |
சூர்த்துடன் வீழ நோக்கிச் | |
சுடுசரஞ் சிதற வல்லா | |
னோர்த்தொன்றே புணர்ப்ப நாடி | |
யொருபகல் காறு நின்றான். | |
|