| மண்மகள் இலம்பகம் | 
1259  | 
 | 
  | 
| 
 விடும் ஒளியும்; வெயிலின் காய்ந்தன - வெயில் கெடுப்பதைப் போலக் கெடுத்தன. 
 | 
| 
    (வி - ம்.) விடுசரம் : வினைத்தொகை. சரம் - அம்பு. வெய்யவன் - ஞாயிறு. ஆயிடை - அப்பொழுது. அடுகதிர் அயில் : வினைத்தொகை. அயில் - வேல். விடுகதிர் : வினைத்தொகை. வெயிலின் - வெயில்போல. 
 | 
( 131 ) | 
| 2233 | 
பூண்குலாம் வனமுலைப் பூமி தேவிதான் |   | 
காண்கலேன் கடியன கண்ணி னாலெனாச் |   | 
சேண்குலாங் கம்பலஞ் செய்ய தொன்றினான் |   | 
மாண்குலாங் குணத்தினான் மறைத்திட் டாளரோ. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பூண் குலாம் வனமுலைப் பூமி தேவிதான் - அணி கலந்த அழகிய முலைகளையுடைய நிலமகள்; கடியன கண்ணினாற் காண்கலேன் எனா - இவ்வாறு கடியவற்றை என் கண்களாற் காணமாட்டேன் என்று; மாண்குலாம் குணத்தினால் - பெருமை பொருந்திய தன் பண்பினால் கருதி; சேண்குலாம் கம்பலம் செய்யது ஒன்றினால் - பெரிய நிலமெல்லாம் பரவக்கூடிய கம்பலமாகிய சிவந்த ஒன்றினால்; மறைத்திட்டாள் - மறைத்துக் கொண்டாள். 
 | 
| 
    (வி - ம்.) 'குணத்தினாள்' என்றும் பாடம். 
 | 
| 
    பூமிதேவி - நிலமகள், தான் : அசை. காண்கலேன் : தன்மையொருமை எதிர்மறை வினைமுற்று. கண்ணினால் கடியன காண்கலேன் என மாறுக. கடியன - கொலைமுதலிய கொடுந்தொழில். ஒரு செய்ய கம்பலத்தால், என்றவாறு. செய்யகம்பலம் குருதிக்குவமை. மாண்குலாம் குணம் காணமாட்டாமைக்கு ஏதுவென்க. 
 | 
( 132 ) | 
வேறு
 | 
| 2234 | 
கலைக்கோட்ட வகலல்குற் |   | 
  கணங்குழையார் கதிர்மணிப்பூண் |   | 
முலைக்கோட்டா லுழப்பட்ட |   | 
  மொய்ம்மலர்த்தா ரகன்மார்பர் |   | 
மலைக்கோட்ட வெழில்வேழந் |   | 
  தவநூறி மதயானைக் |   | 
கொலைக்கோட்டா லுழப்பட்டுக் |   | 
  குருதியுட் குளித்தனரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கலைக்கோட்ட அகல் அல்குல் கணங்குழையார் - கலையணிந்த பக்கத்தையுடைய பரவிய அல்குலையும் திரண்ட குழையையும் உடைய மகளிரது; கதிர்மணிப் பூண்முலைக் கோட் 
 |