| மண்மகள் இலம்பகம் |
1261 |
|
|
| 2236 |
தோலாப்போர் மறமன்னர் | |
தொடித்தோள்க ளெடுத்தோச்சி | |
மேலாண்மே னெருப்புமிழ்ந்து | |
மின்னிலங்கு மயில்வாளாற் | |
காலாசோ டறவெறிந்த | |
கனைகழற்கா லலைகடலு | |
ணீலநீர்ச் சுறாவினம்போ | |
னெய்த்தோருட் பிறழ்ந்தனவே. | |
|
|
(இ - ள்.) தோலாப்போர் மறமன்னர் தொடித் தோள்கள் எடுத்து ஒச்சி - தோல்வியடையாத போரைச் செய்த வீரமுடைய வேந்தர்கள் தம்முடைய தொடி அணிந்த தோளை எடுத்து வீசி; நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால் - தீயைக் கக்கி ஒளி வீசும் கூரிய வாளால்; கால் ஆசோடுஅற - கால் கவசத்துடன் அறும்படி; மேலாள் மேல் எறிந்த - யானைமீதிருப் போரை வெட்டியபோது; கனைகழல் கால்-ஒலிக்கும் கழலணிந்த அக்கால்கள்; அலைகடலுள் - அலைகடலிலே; நீலநீர்ச் சுறாவினம் போல் - நீலநிறச் சுறாவின் இனம்போல; நெய்த்தோருள் பிறழ்ந்தன - குருதியிலே பிறழ்ந்து கிடந்தன.
|
|
(வி - ம்.) 1.கவசம் அணிந்த காலுக்கு நீலச்சுறா உவமை.
|
|
தோலா - தோலாத. மேலாள் - யானை மீதிருக்கும் மறவர். அயில் வாள் - கூரிய வாள். ஆசு - கவசம். கால் சுறாவினம்போல் நெய்த்தோருள் பிறழ்ந்தன என்க. நெய்த்தோர் - குருதி.
|
( 135 ) |
| 2237 |
கருவியூ டுளங்கழிந்த கணைமொய்ப்பக் கதஞ்சிறந்து | |
குருவிசோ் வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்த | |
வுருவத்தே ரிறமுருக்கி யுருணேமி சுமந்தெழுந்து | |
பருதிசோ் வரைபோலப் பகட்டினம் பரந்தனவே. | |
|
|
(இ - ள்.) கருவியூடு - கருவியினூடே சென்று; கணை மொய்ப்ப - அம்புகள் மொய்த்தலின்; குஞ்சரம் உளங்கழிந்து - சில யானைகள் நினைவு தப்பி; குருவி சேர் வரை போன்ற - குருவி
|
|
|
1. ”காலாசோ டற்ற கழற்கால் இருங்கடலுள் - நீலச்சுறாப
|
|
பிறழ்வ போன்ற புனனாடன் - நேராரை அட்ட களத்து.” (களவழி. 9)
|
|
குன்றத் திறுத்த குரீஇனம் போல - அம்புசென்று
|
|
இறுத்த அரும்புண் யானை.' (புறநா. 19 : 89)
|
|
யானைமேல் யானை நெறிதர ஆனாது
|
|
கண்ணேர் கடுங்கணை மெய்ம்மறைப்ப எவ்வாயும்
|
|
எண்ணருங் குன்றிற் குரீயினம் போன்றவே.' (களவழி. 8)
|