பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1263 

   (இ - ள்.) அஞ்சன நிறம் நீக்கி முற்பட அஞ்சன நிறத்தைப் போக்கி; அரத்தம் போர்த்து - செந்நிறத்தைப் பூசுதலால்; இங்குலிக இறுவரை போன்று - சாதிலிங்கத்தையுடைய பெரிய மலையை ஒத்து. இடைமிடைந்த இனக்களிறு - செறிந்த யானைத் திரள்கள், அமர் உழக்கிக் குஞ்சரங்கள் பாய்ந்திடலின் - போரிலே கலக்கிச் சென்று பகைவரின் யானைகளைத் தாக்குவதால்; குமிழிவிட்டு உமிழ் குருதி - குமிழ் விட்டுப் பாயும் குருதி; இங்குலிக அருவி போன்று - சாதிலிங்க அருவிபோலே; எவ்வாயும் தோன்றின - எப்பக்கமும் காணப்பட்டன.

   (வி - ம்.) 'அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி

இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே'

   

(களவழி.7)

( 138 )
2240 குஞ்சரந் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச்
செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த
பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை
யஞ்சிப்போந் தினநரியோ டோரிநின் றலறுமே.

   (இ - ள்.) குஞ்சரம் தலை அடுத்து - குஞ்சரத்தைத் தலை அணையாக அடுத்து; கூந்தல் மாகால் அணையா - குதிரையைக் காலணையாகக் கொண்டு; சினவுவாள் பிடித்து உடுத்த பஞ்சிமேல் - சினத்துக்குரிய வாளைப்பிடித்து, உடுத்த ஆடையின் மேலே; உடைஞாண் கிடந்து பதைத்தது இலங்க - வல்லிக்கயிறு கிடந்து துளங்கியிலங்க; செஞ்சோற்றுக்கடன் நீங்கிக் கிடந்தாரை - செஞ்சோறாகிய கடன் நீங்கும்படி பட்டுக் கிடந்தவரை; அஞ்சிப் போந்து - அஞ்சிச் சென்று : இன நரியோடு ஓரிநின்று அலறும் - இன நரியும் ஓரியும் அலறும்.

   (வி - ம்.) நீங்கி - நீங்க. பஞ்சி - ஆடை : ஆகுபெயர்.

   தலை - தலையணை : ஆகுபெயர் செஞ்சோற்றுக்கடன் ; தாம் அது காறும் இனிதின் உண்டிருந்த செவ்விய சோற்றுக்கடன். அஃதாவது தம்மைப்புரந்த மன்னர்க்கு உற்றுழித் தம்முயிரைக் கொடுத்தல். ”சோறுவாய்த் தொழிந்தோர்” (72) என்றார் முல்லைப் பாட்டினும்.

( 139 )
2241 காதலார்க் கமிர்தீந்த கடற் பவழக் கடிகைவா
யேதிலாப் புள்ளுண்ணக் கொடேமென்று வாய்மடித்துக்
காதணிந்த பொற்றோடுங் குண்டலமு நகநகா
வீததைந்த வரைமார்பர் விஞ்சையர்போற் கிடந்தனரே.

   (இ - ள்.) வீததைந்த வரைமார்பர் - மலர் நெருங்கிய மலையனைய மார்பர்; காதலார்க்கு அமிர்து. ஈந்த கடல் பவழக் கடிகை