பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1273 

   (வி - ம்.) உலோகபாலனாற் காம்பிலி மன்னன் இறந்தான்.

   கொடுமரம் - வில். வாங்கி - வளைத்து. கொற்றவன் ; உலோகபாலன். நெடுமொழிமகளிர் - தங்கற்பின் மிகுதியால் வஞ்சினம் கூறுதற்குரிய மகளிர். மருள் : உவமஉருபு. மன்னர் சிங்கம் போல வீழ்ந்தான் என்க.

( 155 )
2257 பொன்னிறக் கோங்கம் பொற்பூங்
  குன்றெனப் பொலிந்த மேனி
நன்னிற மாலின் மேலா
  நலங்கொடார் நபுல னென்பான்
மின்னிற வெஃக மேந்தி
  வீங்குநீர் மகதை யார்கோன்
கொன்னிறக் களிற்றி னெற்றிக்
  கூந்தன்மாப் பாய்வித் தானே.

   (இ - ள்.) பொன்நிறக் கோங்கம் பொன் பூங்குன்று என - பொன் நிறக் கோங்கமும் பொலிவினையுடைய மலர்க் குன்றமும் போல; பொலிந்த மேனி - பொலிவுற்ற மெய்யினையுடையவனும்; நன்னிற மாவின் மேலோன் - நல்ல நிறமுடைய குதிரை மேலுள்ளவனுமாகிய; நலங் கொள் தார் நபுலன் என்பான் - அழகிய தாரணிந்த நபுலன் என்பவன்; மின்நிற எஃகம் ஏந்தி - ஒளி வீசும் வாளை ஏந்தி; வீங்கு நீர் மகதையார் கோன் - நீர்வளமுடைய மகதநாட்டு மன்னனின்; கொன் நிறக் களிற்றின் நெற்றி - அச்சுறுத்தும் தோற்றமுடைய களிற்றின் உச்சியிலே; கூந்தல் மா பாய்வித்தான் - அப் புரவியைப் பாயவிட்டான்.

   (வி - ம்.) நபுலன் : சீவகன் தம்பி.

   பொன்னிறப் பூங்கோங்கம், பொற்குன்றம் என இயைக்க. நலங்கொள்தார் - ஈண்டுத் தும்பைத்தார் என்க. எஃகம் - வாள். மகதை - மகதநாடு, கூந்தன்மா - குதிரை. அக் கூந்தன்மாவை என்க.

( 156 )
2258 ஏந்தறன் கண்கள் வெய்ய
  விமைத்திட வெறித லோம்பி
நாந்தக வுழவ னாணி
  நக்குநீ யஞ்சல் கண்டாய்
காய்ந்திலே னென்று வல்லே
  கலினமாக் குன்றிற் பொங்கிப்
பாய்ந்ததோர் புலியின் மற்றோர்
  பகட்டின்மேற் பாய்வித் தானே.