பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1276 

   (வி - ம்.) வீறு - வெற்றி. வேழம் பிறப்பாற் றனக்கு ஒப்பின்மையால் அதனை எறிவது வெற்றி எனப்படாது என்பது கருத்து. ஏறுண்டவர் - பிறரால் எறியப்பட்ட மறவர். மிச்சில் - எஞ்சியது. மாறு - நிகர். ஆறு - அறநெறி. உழவன் : எழுவாய்

( 160 )
2262 ஒன்றாயினும் பலவாயினு
  மோரோச்சினு ளெறிய
வென்றாயின மதவேழமு
  முளவோவென வினவிப்
பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப்
  புனை தார்மிஞி றார்ப்பச்
சென்றானிகல் களிறாயிர
  மிரியச்சின வேலோன்.

   (இ - ள்.) சின வேலோன் - புகையும் வலந்திய விபுலன்; வென்றாயின் மதவேழமும் - முன்னர்ப் பல போரினும் வென்று எனக்குப் போதுவனவாகிய மதவேழங்களிலும்; ஒன்று ஆயினும் பல ஆயினும் - ஒன்றே யெனினும் பலவே எனினும்; ஓர் ஓச்சினுள் எறிய உளவோ என வினவி - ஒரு வெட்டிலே ஒரு களிறு ஆக வெட்டுதற்கு உளவோ என்று வினவியவாறு; புனை தார் மிஞிறு ஆர்ப்ப - அணிந்த மலர்மாலையிலே வண்டுகள் முரல; இகல் களிறு ஆயிரம் இரிய - வலிய களிறுகள் ஆயிரம் சிதறி யோடுமாறு; பொன் தாழ்வரைப் புலிப்போத்து என - பொன்மலையிலே உலவும் புலியேறுபோல; சென்றான் - யானைமீது உலவினான்.

   (வி - ம்.) முன்னர். 'அயில் வாள் உயரா' (2260) என்று கூறிப் பின்னர். 'அயிலுழவன்' (2261) 'வேலோன்' (2262) என்றது, யானையிலிருந்து பொருமிடத்து வேல் வேண்டும் என்று கருதி.

( 161 )
2263 புடைதாழ்குழை பொருவில்லுயர்
  பொன்னோலையொ டெரிய
வுடைநாணொடு கடிவட்டினொ
  டொளிர்வாளினொ டொருவ
னடையாநிக ரெறிநீயென
  வதுவோவென நக்கான்
கிடையாயின னிவனேயெனக்
  கிளராணழ குடையான்.

   (இ - ள்.) புடை தாழ் குழை பொரு இல் உயர் பொன் ஓலையொடு எரிய - பக்கத்தே தாழும் குழை ஒப்பற்ற உயர்ந்த பொன் தோடுடன் ஒளிர ; உடை நாணொடு கடி வட்டினொடு