|
(வி - ம்.) ”விண்ணுலகை விரும்பிய விபுலன் ஈண்டு நிற்க, நல் வினையால் அவன் விண்ணுலகிலே நின்றான் என்று தேவர் கூறினார். அவன் ஆங்கு நின்றான் என்க. நிலைபெற்றிருந்த நிலையை அவன் அங்கே நின்றானென்றல் உலகவழக்கு. (செய்யுள் வழக்கினுங்கூட) கன்னின்றான் எந்தை எனவரும். இனி அடைந்தார் என்ற பாடத்திற்கு 'இருவரும் அடைந்தார்' என்பார்க்கு, அவனின்றான் என்பதனை யானை மேனின்றான் என்றல் மரபன்மையின், காலாளாய் இருவரும் நின்றார் எனல் வேண்டும் : அது முற்கூறிய உவமங்கட்குப் பொருந்தாதாம். அயிலை வாளாக்குதல் பொருத்தமின்று. இத்துணையும் விபுலன் பொருதபடி கூறினார்.” இஃது ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கம்.
|
( 164 ) |