(வி - ம்.) முற்செய்யுளிற் கூறிய எஃகம் ஏந்திய காளையும், இச்செய்யுளிற் கூறிய சிங்கநாதனும் ஒருவனே, தனியே வந்து நின்றவன் எதிர்ப்பாரின்மையின், தானே செருக்களத்தை அடைந்தான். வைகி : எச்சத்திரிபு. குருகுலத்தை விளக்கலானும், சீவகற்கும் உலோகபாலற்கும் இறைவனாதலானும் கோவிந்தனை வாழ்த்தினான். பாகம் : பங்கம் எனினும் ஆம்.
|
( 177 ) |