மண்மகள் இலம்பகம் |
1287 |
|
|
(வி - ம்.) இறந்துபடுதலைக் குறித்தலின் வாளை வாங்கினான்.
|
மருப்புத்தாடி - யானைக்கொம்பாற் செய்த கைப்பிடி. இதனை - 'ஆசு', என்பர் நச்சினார்க்கினியர். காலிற் கழலணிந்து என்க. இறைவர் - மன்னர். முளிபுல் - உலர்ந்த புல்.
|
பரவை - பரப்பு. ஆரம் - முத்துவடம். அருவிலை - கொடுத்தற்கரிய பெருவிலை. விழிப்ப - விளங்க.
|
( 178 ) |
2280 |
தாரணி பரவை மார்பிற் | |
குங்கும மெழுதித் தாழ்ந்த | |
வாரமும் பூணு மின்ன | |
வருவிலைப் பட்டி னங்க | |
ளோ்படக் கிடந்த பொன்ஞா | |
ணிருள்கெட விழிப்ப வெய்ய | |
பூரண சேனன் வண்கைப் | |
பொருசிலை யேந்தி னானே. | |
|
(இ - ள்.) தார்அணி பரவை மார்பில் குங்குமம் எழுதி - மாலை அணிந்த அகன்ற மார்பிலே குங்குமத்தை யெழுதி; தாழ்ந்த ஆரமும் பூணும் மின்ன - தங்கிய முத்துவடமும் பூண்களும் மின்ன அணிந்து; அருவிலைப் பட்டுஇனங்கள் ஏர்படக் கிடந்த பொன்ஞாண் - அரிய விலையையுடைய பட்டாடைகளின் மேல் அழகுறக் கிடந்த அரைஞாண்; இருள்கெட விழிப்ப - இருளை நீக்க அணிதலாலே விளங்க; வெய்ய பூரணசேனன் வண்கைப் பொருசிலை ஏந்தினான் - போரிற் கொடியவனான பூரணசேனன் என்பவன் தன் வளம்பொருந்திய கையிலே வில்லை ஏந்தினான்.
|
(வி - ம்.) பூரணசேனன் - ஒரு போர்மறவன். இவன் கட்டியங்காரன் படையிலுள்ளவன்.
|
( 179 ) |
2281 |
ஊனமர் குறடு போல | |
விரும்புண்டு மிகுத்த மார்பிற் | |
றேனமர் மாலை தாழச் | |
சிலைகுலாய்க் குனிந்த தாங்கண் | |
மானமர் நோக்கி னாரு | |
மைந்தருங் குழீஇய போருட் | |
கானமர் காம னெய்த | |
கணையெனச் சிதறி னானே. | |
|