மண்மகள் இலம்பகம் |
1290 |
|
|
என்னாம் என்றவாறு. இது தன்னைக் கண்டஞ்சிய மறவர்க்குக் கூறிய தென்க.
|
( 183 ) |
2285 |
முடிச்சடை முனிவ னன்று | |
வேள்வியிற் கொண்ட வேற்கண் | |
மடத்தகை மகளிர் கோல | |
வருமுலை யுழக்கச் சேந்து | |
கொடிப்பல வணிந்த மார்பிற் | |
கோவிந்தன் வாழ்க வென்று | |
நடத்துவா னவனை நோக்கி | |
நகாச்சிலை பாரித் தானே. | |
|
(இ - ள்.) முடிச்சடை முனிவன் அன்று வேள்வியில் கொண்ட வேல் - சடை முடியுடைய வீரபத்திரன் அக் காலத்துத் தக்கன் வேள்வியிலே ஏந்திய வேலைப் போன்ற; கண் மடத்தகை மகளிர் - கண்களையுடைய இளமையும் அழகுடைய மாதர்களின்; வருமுலை உழக்கச் சேந்து - வளரும் முலைகள் உழக்குதலாற் சிவந்து; கொடிப் பல அணிந்த மார்பின் - பல கொடிகளை அணிதற்குக் காரணமான மார்பினையுடைய; கோவிந்தன் வாழ்க என்று - கோவிந்தன் வாழ்வானாக என்று கூறி; நடத்துவான் - போரைச் செய்யும் சிங்கநாதன்; அவனை நோக்கி நகா - அப்பூரணசேனனைப் பார்த்து நகைத்து; சிலை பாரித்தான் - வில்லை வளைத்தான்.
|
(வி - ம்.) இறைவன் தன்னைப் போலப் படைத்தலின் வீரபத்திரதேவனை, 'முனிவன்' என்றார் 'அன்று தக்கன் வேள்வியைத் தவிர்ப்பான் வேண்டி இறைவன் தானாகப் படைத்துக் கொண்ட முனிவனைப் போலுங் கேவிந்தன்; வேற்கண் மகளிர் முலையுழக்குதலின் சிவக்கப் பட்டுக் கொடியணிதற்குக் காரணமான மார்பினையுடைய கோவிந்தன், என்றுரைப்பார் நச்சினார்க்கினியர்.
|
( 184 ) |
2286 |
போர்த்தநெய்த் தோர னாகிப் | |
புலாற்பருந் தார்ப்பச் செல்வான் | |
சீர்த்தகை யவனைக் கண்டென் | |
சினவுவே லின்னு மார்ந்தின் | |
றூர்த்துயி ருன்னை யுண்ணக் | |
குறைவயி றாரு மென்றாங் | |
கார்த்தவாய் நிறைய வெய்தா | |
னம்புபெய் தூணி யொத்தான். | |
|
(இ - ள்.) போர்த்த நெய்த்தோரன் ஆகி - மெய்யை மூடிய குருதியுடன்; புலால் பருந்து ஆர்ப்பச் செல்வான் - புலாலுக்
|