மண்மகள் இலம்பகம் |
1292 |
|
|
2288 |
புனைகதிர்ப் பொன்செய் நாணிற் | |
குஞ்சியைக் கட்டி நெய்த்தோர் | |
நனைகதி ரெஃக மேந்தி | |
நந்தன்வாழ் கென்ன நின்ற | |
வினையொளிர் காளை வேலைக் | |
கடக்கலார் வேந்தர் நின்றார் | |
கனைகடல் வேலை யெல்லை | |
கடக்கலா வண்ண நின்றார். | |
|
(இ - ள்.) புனைகதிர்ப் பொன்செய் நாணின் - அழகிய கதிரையுடைய பொன்னாலான கயிற்றால்; குஞ்சியை கட்டி - தன் சிகையைக் கட்டி; நெய்த்தோர் நனை கதிர் எஃகம் ஏந்தி - குருதியால் நனைந்த வேலை ஏந்தி; நந்தன் வாழ்க என்ன - நந்தட்டன் வாழ்வானாக என்று; நின்ற வினையொளிர் காளை வேலைக் கடக்கலார் - நின்ற போரில் விளங்கும் காளையின் கையில் உள்ள வேலைக் கடக்க இயலாதவராய்; வேந்தர் நின்றார் - மன்னர்கள் நின்றவர்கள்; கனைகடல் வேலை எல்லை கடக்கலா வண்ணம் நின்றார் - ஒலிக்கும் கடற்கரையின் எல்லைக் கடக்கமாட்டாத தன்மைபோல் நின்றார்.
|
(வி - ம்.) இவன், நந்தட்டன் பணியாள்.
|
வினையொளிர்காளை - போர்த் தொழிலிடத்தே வெற்றியெய்திப் புகழ்படைத்த காளை. இவன் நந்தட்டனுடைய மறவன். வேலைக் கடவாது நின்ற மன்னர்க்குக் கரைகடவா தடங்கிய கடலுவமை.
|
( 187 ) |
2289 |
நின்றவப் படையு ளானே | |
யொருமக னீலக் குஞ்சி | |
மன்றல மாலை நெற்றி | |
மழகளி றன்றி வீழான் | |
வென்றியங் கொளிறும் வெள்வேன் | |
மின்னென வெகுண்டு விட்டான் | |
சென்றவேல் விருந்து செங்கண் | |
மறவனக் கெதிர்கொண் டானே. | |
|
(இ - ள்.) அப்படையுளானே - கட்டியங்காரன் படையில் உள்ளவனேயான; மன்றல் மாலை நெற்றி மழகளிறு அன்றி வீழான் - மணத்தையுடைய மாலை அணிந்த நெற்றியையுடைய மழகளிற்றையன்றி வீழ்த்தாதவனாய்; நின்ற நீலக்குஞ்சி ஒரு மகன் - நின்ற கரிய முடியை உடைய ஒரு வீரன்; வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் - வென்றி கொண்டு புகழ் பரவி விளங்கும்.
|