பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1296 

கின்ற மாலையையும், துடிபோலும் இடையினையும் உடைய மகளிர் ஆராய்ந்த; மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை - பெருமை மிக்க வெள்ளிய முத்துக்கள் ஒளிரும் அரும்பனைய முலைகள்; உழுது சாந்தம் கோட்டு மண் கொண்ட மார்பம் - உழுது, சாந்தைத் தலையிலே அழகாகக் கொண்ட மார்பில்; கோதை வாள் குளித்து மூழ்கி - மாலையணிந்த வாள் நுழைந்து முழுகி; கோட்டு மண் கொள்ள - தன் நுனியிலே தசையைக் குத்தியெடுக்குமாறு; குருசில் மண் கொள்ள நின்றான் நின்றான் - சீவகன் மண் கொள்ளுமாறு நின்ற சலநிதி என்பவன் நின்றான்.

   (வி - ம்.) போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த சலநிதி தன்னினைவின்றி வாளைப் பலகாலும் நுழைத்து ஊன் கொள்ள நின்றான். 'வெஞ்சமம் நோக்கி நின்று' என்பதனை இச் செய்யுளிற் கொணர்ந்து, அரசர் அஞ்சியோடுதலின் இனி நமக்குப் போரில்லையென்ற சலநிதி நினைத்தா னென்று கூறுவர் நச்சினார்க்கினியர்.

   வாள் உருவாதிருத்தலின், தசையைக் குத்தி யெடுத்துக் குருதியிலே குளித்து நின்ற தென்க.

( 193 )
2295 எரிமணிக் குப்பை போல விருளற விளங்கு மேனித்
திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி
யருமணி யரச ராவி யழலம்பிற் கொள்ளை சாற்றி
விரிமணி விளங்கு மான்றோ் விண்டொழ வேறி னானே.

   (இ - ள்.) எரி மணிக் குப்பைபோல இருள் அற விளங்கும் மேனி - ஒளிரும் மணித்திரள் போல இருள் நீங்க இலங்கும் மெய்மையும்; திருமணிச் செம்பொன் மார்பின் - அழகிய மணிகளிழைத்த பொன் அணி விளங்கும் மார்பினையும் உடைய; சீவகன் சிலை கை ஏந்தி - சீவகன் கையிலே வில்லை ஏந்தி; அருமணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி - அரிய மணி அணிந்த வேந்தரின் உயிரைத் தன் தழற் கணையாலே கொள்ளை யிடுவதைத் தன் நெஞ்சிலே அமையச் செய்து; விண் தொழ - விண்ணவர் தொழ; விரிமணி விளங்கும் மான் தேர் ஏறினான் - ஒளி பரவும் மணிகளிழைத்து விளங்கும் புரவிபூட்டிய தேரிலே ஏறினான்.

   (வி - ம்.) செம்பொன் : பொன்னாலான அணிகட்கு ஆகுபெயர். விண்ணவர் - ஈண்டு விஞ்சையர். விண் : இடவாகு பெயர்.

( 194 )
2296 கருவளி முழக்குங் காருங்
  கனைகட லொலியுங் கூடி
யருவலிச் சிங்க வார்ப்பு
  மாங்குடன் கூடிற் றென்னச்