பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1303 

தேர்பல முறியவும் - பொன்னாலான தேர்கள் பல முறியவும்; சிங்கம் போல் தொழித்து ஆர்த்து - சிங்கம்போற் சினந்து முழங்கி; அவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினார் - கட்டியங்காரனின் மக்கள் தேர்மீது காணப்பட்டனர்.

   (வி - ம்.) துளங்கு - அசைந்து. அலமர - அசைய. யானைகட்குக் குன்றுகள் உவமை. சங்கிற்குத் திங்கள் உவமை. மாநிரை குதிரையணி. தொழித்தல் - சினத்தல், அவன் என்றது கட்டியங்காரனை.

( 205 )
2307 சந்த னஞ்சொரி தண்கதிர்த்
  திங்க ளந்தொகை தாம்பல
குங்கு மக்கதிர்க் குழவியஞ்
  செல்வ னோடுடன் பொருவபோன்
மங்குன் மின்னென வள்ளறோ்
  மைந்தர் தேரொடு மயங்கலின்
வெங்கண் வில்லுமிழ் வெஞ்சர
  மிடைந்து வெங்கதிர் மறைந்ததே.

   (இ - ள்.) குங்குமக் கதிர்க் குழவி அம் செல்வனோடு - குங்குமம் போலச் சிவந்த கதிர்களையுடைய இளஞாயிற்றுடன்; சந்தனம் சொரிதண் கதிர்த் திங்கள் அம் தொகை தாம்பல உடன் பொருவபோல் - சந்தனம் போலச் சொரியும் தண்ணிய கதிரையுடைய திங்களின் திரள்கள் தாம் பலவும் சேரப் பொருவன போல; மங்குல் மின்னென மைந்தர் தேரொடு வள்ளல் தேர் மயங்கலின் - முகிலிடை மின்போல மைந்தர்களின் தேருடன் சீவகன் தேரும் மயங்குதலின்; வெங்கண் வில்உமிழ் வெஞ்சரம் மிடைந்து - கொடிய வில் உமிழ்கின்ற கொடுங் கணைகள் நெருங்கலாலே; வெங்கதிர் மறைந்தது - ஞாயிறு மறைந்தது.

   (வி - ம்.) தண்கதிர்த் திங்கள் தொகை கட்டியங்காரன் மக்களுக்கு உவமை. கதிர்க்குழவியஞ் செல்வன் - (ஞாயிறு) சீவகனுக்குவமை. வள்ளல் : சீவகன். வெங்கதிர் - ஞாயிறு.

( 206 )
2308 குருதி வாளொளி யரவினாற்
  கொள்ளப் பட்டவெண் டிங்கள்போற்
றிருவ நீர்த்திகழ் வலம்புரி
  வாய்வைத் தாங்கவன் றெழித்தலும்
பொருவில் கீழ்வளி முழக்கினாற்
  பூமி மேற்சன நடுங்கிற்றே
யரவ வெஞ்சிலை வளைந்ததே
  யண்ணல் கண்ணழ லுமிழ்ந்ததே.