மண்மகள் இலம்பகம் |
1305 |
|
|
அவன் புதல்வர் அணி வகுத்து வந்தவருடனும் சீவகன் பொருதவடி கூறினார்.
|
( 208 ) |
2310 |
நிவந்த வெண்குடை வீழவும் | |
வேந்தர் நீள்விசும் பேறவு | |
முவந்து பேய்க்கண மாடவு | |
மோரி கொள்ளைகொண் டுண்ணவுங் | |
கவந்த மெங்கணு மாடவுங் | |
களிறு மாவொடு கவிழவுஞ் | |
சிவந்த சீவக சாமிகண் | |
புருவ மும்முரி முரிந்தவே. | |
|
(இ - ள்.) நிவந்த வெண்குடை வீழவும் - உயர்ந்த வெண்குடை வீழவும்; வேந்தர் நீள் விசும்பு ஏறவும் - அரசர்கள் பெரிய வானிலே செல்லவும்; உவந்து பேய்க்கணம் ஆடவும் - மகிழ்ந்து பேய்க்கூட்டம் ஆடவும்; ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும் - ஆண் நரி கொள்ளையாகக் கொண்டு உண்ணவும்; கவந்தம் எங்கணும் ஆடவும் - குறைத்தலைகள் எங்கும் ஆடவும்; களிறு மாவொடு கவிழவும் - யானைகள் குதிரைகளுடன் கவிழவும்; சிவந்த சீவக சாமிகண் புருவமும் முரிமுரிந்த - சீவக சாமியின் கண்களும் சிவந்தன; புருவங்களும் வளைந்தன.
|
(வி - ம்.) இது முதலாகப் பதுமயூகம் வகுத்து நின்ற கட்டியங்காரனுடன் சீவகன் பொருதமை கூறுகின்றார்.
|
எச்சங்கள் எதிர் காலம் நோக்கின; குறையாகிய தலையை உடையதனைக் குறைத்தலை என்றது ஆகுபெயர். அவன் படை வகுப்பைக் கண்டு சீவகற்குக் கோபம் நிகழ்ந்தமை கூறினார். 'முரிமுரிந்த' என்பதனை, 'அணியலும் அணிந்தன்று' (புறநா. - கடவுள் வாழ்த்து) என்றாற் போலக் கொள்க.
|
( 209 ) |
2311 |
பொய்கை போர்க்களம் புறவிதழ் | |
புலவு வாட்படை புல்லித | |
ழைய கொல்களி றகவித | |
ழரச ரல்லிதன் மக்களா | |
மையில் கொட்டையம் மன்னனா | |
மலர்ந்த தாமரை வரிசையாற் | |
பைய வுண்டபின் கொட்டைமேற் | |
பவித்திரத் தும்பி பறந்ததே. | |
|
(இ - ள்.) பொய்கை போர்க்களம் - பொய்கை பொருங் களமாகவும்; புறஇதழ் புலவு வாள்படை - புறவிதழ் வாட்படை
|