பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1314 

2325 கோட்டுமீன் குழாத்தின் மள்ள
  ரீண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டுமீன் சூழாத்தி னெங்குந்
  தீவிகை மொய்த்த முத்த
மாட்டுநீர்க் கடலி னார்த்த
  தணிநகர் வென்றி மாலை
கேட்டுநீர் நிறைந்து கேடில்
  விசயைகண் குளிர்ந்த வன்றே.

   (இ - ள்.) கோட்டுமீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினார் - சுறா மீனின் குழாம்போல வீரர்கள் கூடினர்; மன்னர் ஈண்டினர் - அரசர்கள் சூழ்ந்தனர்; மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த - பெருமையுடைய விண்மீன் திரள்போல எங்கும் விளக்குகள் மொய்த்தன; முத்தம் ஆட்டும் நீர்க்கடலின் அணிநகர் ஆர்த்தது - முத்துக்களைத் தாலாட்டு்ம் நீரையுடைய கடல்போல அழகிய நகர் ஆரவாரித்தது; வென்றிமாலை கேட்டு கேடு இல் விசயை கண் - வெற்றிமாலையைக் கேட்டுக் குற்றமற்ற விசயையின் கண்கள்; நீர் நிறைந்து குளிர்ந்த - நீர் நிறைந்து குளிர்ந்தன.

   (வி - ம்.) கனவு புணையாக இறந்துபடாது இருத்தலின், 'கேடு இல் விசயை' என்றார். அவன் புதல்வரைக் கொன்று அவனைக் கொல்வதால் 'ஒழுங்கு' என்றார்.

( 224 )
2326 அணிமுடி யரசர் மாலை
  யழனுதி வாள்க ளென்னு
மணிபுனை குடத்தி னெய்த்தோர்
  மண்ணுநீர் மருள வாட்டிப்
பணைமுலைப் பைம்பொன் மாலைப்
  பாசிழைப் பூமி தேவி
யிணைமுலை யேக மாக
  நுகரிய வெய்தி னானே.

   (இ - ள்.) அணிமுடி அரசர் மாலை அழல்நுதி வாள்கள் என்னும் - அழகிய முடியையுடைய அரசர்களின் மாலையணிந்த அழல் பொருந்திய நுனியை உடைய வாட்கள் என்கிற; மணி புனை குடத்தின் - மணிகள் இழைத்த குடத்தினாலே; நெய்த்தோர் மண்ணுநீர் மருள ஆட்டி - குருதியாகிய மஞ்சன நீரை நன்றாக ஆட்டி ; பணைமுலைப் பைம்பொன் மாலைப் பாசிழைப் பூமிதேவி - பருத்த முலைகளையும் பைம்பொன் மாலையையும் பசிய அணிகலன்