பூமகள் இலம்பகம் |
1345 |
|
|
சேர்க்க. ‘கோத்லைத் தரும் நிதியம்‘ என்பது ‘கோத்தரு நிதியம், என விகாரப்பட்டது. அரசன் கூறாதன தான் கூறினானல்லன்; அவன் அரசாட்சி பெற்றாற் செய்யும் அறங்களாகத் தனக்கு முற்கூறியவற்றைப் பின் தான் சாற்றுவித்தான் என்க.
|
( 50 ) |
2377 |
திருமக னருளப் பெற்றுத் | |
திருநிலத் துறையு மாந்த | |
ரொருவனுக் கொருத்தி போல | |
வுளமகிழ்ந் தொளியின் வைகிப் | |
பருவரு பகையு நோயும் | |
பசியுங்கெட் டொழிய விப்பாற் | |
பெருவிறல் வேந்தர் வேந்தற் | |
குற்றது பேச லுற்றேன். | |
|
(இ - ள்.) திருமகன் அருளப் பெற்று - (இவ்வாறு) அரசன் அருளப் பெறுதலின்; திருநிலத்து உறையும் மாந்தர் - அவனுடைய அழகிய நாட்டிலே வாழும் மக்கள்; ஒருவனுக்கு ஒருத்திபோல உளம் மகிழ்ந்து - ஒருவனுக்கு ஒருத்திபோல மனங்களித்து; ஒளியின் வைகி - புகழுடன் தங்குதலால்; பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய - துன்புறுத்தும் பகையும் பிணியும் பசியும் கெட்டு விலக (அரசாளும் நாளிலே) இப்பால் - இனி; பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசலுற்றேன் - பேராற்றலையுடைய மன்னர் மன்னனான சீவகனுக்கு நிகழ்ந்ததை இயம்பத் தொடங்கினேன்.
|
(வி - ம்.) திருமகன் : சீவகன், அன்பான் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் கூடிய வழி உளமகிழ்ந்திருத்தல் போன்று மகிழ்ந்து என்றவாறு. வைகி - வைக. ஒளி - புகழ். வேந்தர் வேந்தன் : சீவகன்.
|
( 51 ) |
பூமகள் இலம்பகம் முற்றிற்று.
|