இலக்கணையார் இலம்பகம் |
1348 |
|
|
ஆலமரத்திற்குப் பீடமமைத்து ஐந்தூரை அதற்கு இறையிலியாக விட்டான். இவ்வாறு நல்லறம் பலவு மியற்றி நாடின்புற அருளாட்சி செய்தனன்.
|
2378 |
அலங்க லேந்திய குங்கும வருவரை மார்பன் | |
|
கலந்த காரிகை யவர்களைத் தருகென வருள | |
|
விலங்கு மாலைவெள் ளருவிய வெழில்வரை மணந்த | |
|
புலம்பு நீள்சுரம் போய்க்கொணர்ந் தருளொடுங் கொடுத்தார். | |
|
(இ - ள்.) அலங்கல் ஏந்திய குங்கும அருவரை மார்பன் - மாலையை அணிந்த குங்கும மலைபோலும் மார்பன்; கலந்த காரிகையவர்களைத் தருக என அருள - தான் மணந்த மகளிரைத் தருவீராக என்று அருளிச் செய்ய; இலங்கும் மாலை வெள்அருவிய எழில்வரை மணந்த - விளங்கும் மாலை போன்ற வெள்ளிய அருவியை உடையனவாகிய அழகிய மலைகள் கலந்த; புலம்பு நீள்சுரம் அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் - வருத்தமூட்டும் நீண்ட காட்டு வழியிலே அரசன் அருளுடன் சென்று கொணர்ந்து விடுத்தனர்.
|
(வி - ம்.) அலங்கல் - மாலை. அருவரை - கடத்தற்கரிய மலை. மார்பன் : சீவகன். கலந்தகாரிகையர் என்றது - மனைவிமாரை. நீள்சுரம் - நெடிய பாலைவழி. அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் என மாறுக.
|
( 1 ) |
2379 |
மோடு கொண்ணிலா முளைத்தெழு பருதிகண் டறியாப் | |
|
பாடு வண்டொடு பறவையு நடுக்குறுங் காப்பின் | |
|
மாட மாமணிச் சிவிகையின் மயிலென விழிந்தார் | |
|
வீடு கண்டவர் போன்றுமின் னிடுகொடி யனையார் | |
|
(இ - ள்.) மோடுகொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா - பெருமை கொண்ட நிலவையும் கடலிடைத் தோன்றி எழும் ஞாயிற்றையும் கண்டறியாத; பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின் - பாடுகின்ற வண்டும் பறவையும் அஞ்சுகின்ற காவலையுடைய; மாடம் மாமணிச் சிவிகையின் - மாடம் போன்ற பெரிய மணிகளாலாகிய பல்லக்கிலிருந்து; மின் இடு கொடி அனையார் - மின்னுக் கொடி போன்ற அம்மங்கையர்; வீடு கண்டவர் போன்று - பேரின்ப வீட்டைக் கண்டவரைப் போன்ற மகிழ்வுடன்; மயில் என இழிந்தார் - மயிலிழிந்தாற்போல இழிந்தனர்.
|
(வி - ம்.) திங்களும் ஞாயிறுங் கண்டறியாத மாடத்தின் கண்ணே, காப்பினையுடைய சிவிகையினின்றும் இழிந்தனர் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|