இலக்கணையார் இலம்பகம் |
1355 |
|
|
பெற்ற ஒப்பனை நிறைந்த முரசை இடி உமிழ்ந்த ஓசைபோல முழங்கும்படி; அறைந்தார் - அறைந்தனர்.
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர், 'நெடுநகர் வாழ்கென' என்பதைக் 'கேண்மின்' என்பதன் முன் அமைப்பர்.
|
சீலம் - ஒழுக்கம். இல்லனவாகிய சினக்களிறு என்க. அவை திருமணவிழாவிற் குழுமும் மாந்தர்க்குத் தீங்கு செய்யும் என்பதுபற்றி அகற்றுக என்றவாறு.
|
”விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி |
|
எழாநிலை புகாஅ இனங்கடி சீற்றத்து |
|
ஆணை யிகக்கும் அடக்கருங் களிறு |
|
சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென”. |
|
என்றார் கதையினும். ( 1 - 38; 90 - 3.) தழங்கு - முழக்கம்.
|
( 15 ) |
வேறு
|
2393 |
முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய் | |
|
விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின | |
|
புரையில் பொன்மணி யாழ்குழ றண்ணுமை | |
|
வரவ வானி னதிர்ந்த வணிமுழா. | |
|
(இ - ள்.) முரசம் ஆர்ந்த பின் - முரசறைந்த பிறகு ; மூவிரு நாள்கள் போய் - ஆறு நாட்கள் கழிய; எங்கணும் விரை வொடு வெள்வளை விம்மின - எங்கும் பரபரப்புடன் வெண்சங்குகள் முழங்கின; புரைஇல் பொன்மணி யாழ்குழல் தண்ணுமை அணிமுழா - குற்றம் இல்லாத யாழும் குழலும் தண்ணுமையும் அழகிய முழாவும்; அரவ வானின் அதிர்ந்த - ஒலியுறும் முகில் முழக்கென முழங்கின.
|
(வி - ம்.) போய் - போக. போகா நிற்க இவையும் நிகழ்ந்தன என மேல் வருவனவற்றையும் உடனிகழ்ச்சியாக்குக. 'ஆர்த்த' என்பது 'ஆர்ந்த' என விகாரப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 16 ) |
2394 |
விண்வி ளக்குவ போல்விரி பூந்துகள் | |
|
கண்வி ளக்கிக் கலந்தவெண் சாந்தினான் | |
|
மண்வி ளக்கி மலர்ப்பலி சிந்தினார் | |
|
பண்வி ளக்கிய பைங்கிளி யின்சொலார். | |
|
(இ - ள்.) பண் விளங்கிய பைங்கிளி இன்சொலார் - பண்ணைத் தோற்றுவித்த இனிய கிளிமொழியார்; விண் விளக்குவ போல் - வானுலகத் துராலைத் துடைக்குமாறு போல; விரிபூந்துகள் கலந்த கண் விளக்கி - மிகுந்த பூந்துகளை அதனுடன்
|