இலக்கணையார் இலம்பகம் |
1362 |
|
|
கட்டி; ஆய்கதிர் அருங்கலப் பொடியினால் - சிறந்த ஒளியையுடைய அருங்கலன்களின் பொடியாலே; ஆய்பொன் பூமகள் மருங்குல் குயிற்றிய நகரில் - பொன்னணிந்த நிலமகளின் இடைபோலே நுடங்கும்படி கோலம் இட்ட இடத்திலே; பிணையல் மாலையார் மங்கலப் பெருந்தவிசு அடுத்தனர் - பிணைந்த மாலையணிந்த மகளிர் மங்கலமாகிய பெரிய தவிசை இட்டனர்.
|
(வி - ம்.) பொன் பூமகள் - திருமகள் மணவறை நிலத்தைத் திருமகளின் இடைபோலப் புனைதல் வழக்கம், ஈண்டு நச்சினார்க்கினியர் பூமகள் என்பதற்கு நிலமகள் என்றே பொருள் கூறுகின்றனர். திருமகள் என்றலே சிறப்பென்பதனை.
|
”போரடு மன்னர்க்குப் புரையோர் புகழ்ந்த |
|
பாசடைத் தாமரைத் தாதகத் துறையும் |
|
மாசின் மடமகள் மருங்கின் வடிவாய்க் |
|
குலாஅய்க் கிடந்த கோலக் கோணத்துக் |
|
கலாஅய்க் கிடந்து கவ்விய கொழுந்தின் |
|
வள்ளியு மலரும் கொள்வழிக் கொளீஇ |
|
வலமுறை வகுத்த நலமுறை நன்னகர்” |
|
எனவரும் பெருங்கதைப் பகுதியான் (2. 4 : 79 - 85) உணரலாம்.
|
( 32 ) |
2410 |
நலங்கிளர் காணமு மணியு நன்பொனும் | |
|
வலம்புரி முத்தமுங் குவித்த மங்கல | |
|
மிலங்கின மணிவிளக் கெழுந்த தீம்புகை | |
|
கலந்தவா யிரத்தெண்மர் கவரி யேந்தினார். | |
|
(இ - ள்.) நலம் கிளர் காணமும் மணியும் நன்பொனும் வலம்புரி முத்தமும் குவித்த - அழகு விளங்கும் பொற்காசும் மணியும் பொன்னும் வலம்புரியிலிருந்து பிடைத்த முததும் குவிக்கப்பட்டன; மங்கலம் இலங்கின - என் மங்கலமும் விளங்கின; மணிவிளக்கு எழுந்த - மணிவிளக்குகள் எழுந்தன; தீ புகை கலந்த - இனிய புகைகள் கலந்தன; ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினார் - ஆயிரத்தெட்டு மகளிர் கவரி ஏந்தினர்.
|
(வி - ம்.) காணம் - பொற்காசு. குவித்த : பலவறிசொல். குவிக்கப்பட்டன என்க. தீம்புகை - இனிய நறுமணப்புகை. கலந்த : பலவறி சொல்.
|
( 33 ) |
2411 |
மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் | |
|
மங்கல மன்னவன் வாழ்த்த வேறலு | |
|
மங்கல வச்சுதந் தெளித்து வாய்மொழி | |
|
மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார். | |
|