இலக்கணையார் இலம்பகம் |
1365 |
|
|
2415 |
கான்முகம் புதைத்த தெண்ணீர் | |
|
கவர்ந்துபொற் குடங்க ளார்த்தி | |
|
யூன்முகம் புதைத்த வேற்கண் | |
|
ணவர்களிற் றுச்சி யேற்றி | |
|
வான்முகம் புதைத்த பன்மீன் | |
|
மதியென மருண்டு நோக்கத் | |
|
தேன்முகம் புதைத்த மாலைக் | |
|
குடைநிழற் றிருவிற் றந்தார். | |
|
(இ - ள்.) ஊன்முகம் புதைத்த வேல் கண்ணவர் - நிணத்தை அழுத்திய வேல்போலும் கண்ணினார்; கான்முகம் புதைத்த தெண்ணீர் கவர்ந்து பொன்குடங்கள் ஆர்த்தி - பூமுகம் மறைத்த தௌ்ளிய நீரை முகந்து பொற்குடங்களிலே நிறைத்து: வான்முகம் புதைத்த பன்மீன் மதியென மருண்டு நோக்க - (அவற்றை) வானிடத்தை மறைத்த பல மீன்களும் திங்களும் என மயங்கி நோக்கும்படி ; களிற்று உச்சி ஏற்றி - களிறுகளின் தலையிலே ஏற்றி; தேன்முகம் புதைத்த மாலைக் குடைநிழல் திருவில் தந்தார் - தேனினம் முகத்தை மறைத்த மாலையையுடைய குடையின் நிழலிலே செல்வத்துடன் தந்தனர்.
|
(வி - ம்.) குடங்கட்குப் பன்னிறமுடைமையானும், சிறுமை பெருமையானும் மீனும் திங்களும் உவமையாயின.
|
( 38 ) |
2416 |
இழைத்தபொன் னகரின் வெள்ளி | |
|
யிடுமணை மன்ன ரேத்தக் | |
|
குழைப்பொலிந் திலங்கு காதிற் | |
|
கொற்றவ னிருந்த பின்றை | |
|
மழைக்கலின் றெழுந்த வார்கொண் | |
|
மணிநிற வறுகை நெய்தோய்த் | |
|
தெழிற்குழை திருவில் வீச | |
|
மகளிர்நெய் யேற்று கின்றார். | |
|
(இ - ள்.) பொன் இழைத்த நகரின் - பொன்னால் இழைத்த மண்டபத்திலே; வெள்ளியிடு மணை - வெள்ளியாற் செய்த மணையிலே; மன்னர் ஏத்த - அரசர்கள் புகழ; குழைப்பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்ற - குழை பொலிவுற்று விளங்கும் காதினையுடைய அரசன் அமர்ந்த பின்னர் ; மழைக் கவின்று எழுந்த வார்கொள் மணிநிற அறுகை - மழைக்குக் கிளைத்து அழகுற்று எழுந்த நீண்ட நீலமணிபோலும் நிறமுடைய அறுகினை; நெய்தோய்த்து - நெய்யிலே தோய்த்து; எழில
|