பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1366 

குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார் - அழகிய குழை வானவில்லென ஒளிவீச மகளிர் நெய்யேற்றத் தொடங்கினர்.

   (வி - ம்.) பொன்னகர் என்றது மணவறையை. இடுமணை : வினைத்தொகை. கொற்றவன் : சீவகன். பின்றை - பின்பு. மழைக்குக் கவின் றெழுந்த என்க. மணி - நீலமணி. அறுகை - அறுகம்புல். நெய் யேற்றுதல் - ஒரு சடங்கு.

( 39 )
2417 மின்னுமிழ் வைரக் கோட்டு
  விளங்கொளி யிமய மென்னும்
பொன்னெடுங் குன்றம் போலப்
  பூமிமே னிலவி வைய
நின்னடி நிழலின் வைக
  நேமியஞ் செல்வ னாகி
மன்னுவாய் திருவோ டென்று
  வாழ்த்திநெய் யேற்றி னாரே.

   (இ - ள்.) மின்உமிழ் வைரக் கோட்டு - ஒளியை உமிழும் வைர உச்சியையுடைய; விளங்கு ஒளி இமயம் என்னும் பொன் நெடுங்குன்றம் போல - விளங்கும் ஒளியை உடைய இமயம் என்கிற நீண்ட பொன்மலை போல; பூமிமேல் நிலவி - நிலமிசை நிலைபெற்று; நின் அடி நிழலின் வையம் வைக - உன் அடி நிழலிலே உலகம் தங்க; நேமி அம் செல்வன் ஆகி - சக்கரவாளத்திற்குத் தலைவனாகி; திருவோடு மன்னுமாய் என்று - இலக்கணையுடன் நிலைபெற்று வாழ்க என்று; வாழ்த்தி நெய் ஏற்றினார் - வாழ்த்தி நெய்யை ஏற்றினார்.

   (வி - ம்.) வயிரம் என்னும் மணி பிறத்தற்கிடமான கோடு என்க. வையம் - உலகம். நேமியஞ் செல்வன் - சக்கரவாளத்திற்குத் தலைவன். திரு - ஈண்டிலக்கணை.

( 40 )
2418 நீடு நீர்மணி நீரு மல்லவு
மாடு நீரன வத்து மண்களு
மூடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார்
கூடி யின்னியங் குழுமி யார்த்தவே.

   (இ - ள்.) ஊடு மின்னனார் - இடை மின்போன்ற மகளிர்; ஆடு நீரன அத்தும் மண்களும் அல்லவும் உரிஞ்சி - பூசும் நீரனவாகிய துவராலும் மண்ணாலும் அல்லனவற்றாலும் தேய்த்து; நீடுநீர் மணி நீரும் ஆட்டினார் - கங்கை முதலிய தூய நீராலும் சந்திரகாந்தக் கல்லின் நீராலும் ஆட்டினார் ; கூடும் இன் இயம் குழுமி ஆர்த்த - (அப்போது) தம்மில் அளவொத்த இனிய இயங்கள் கூடி ஒலித்தன.