முத்தி இலம்பகம் |
1368 |
|
|
(வி - ம்.) மணித்தூண் நான்கினால் விளங்கு கூடம், வெள்ளியால் வேய்ந்து மாலைசூழ் கூடம் என இயைக்க.
|
( 43 ) |
|
(இ - ள்.) ஆய்ந்த பால்நிறம் ஆய் பொன் கம்பலம் வேய்ந்த - தெரிந்த பால்நிறம் ஒளிகெட்ட பொலிவினையுடைய கம்பலம் வேய்ந்த; பொங்குஅணை வெண்பொன் கட்டில்மேல் - பொங்கும் அணையையுடைய வெள்ளிக் கட்டிலின்மேல் ; நீந்தும் நித்தில விதான நிழலாற்கு - வெள்ளத்தில் உண்டான முத்துப் பந்தரின் நிழலிலே இருந்தவனுக்கு; அணி ஏந்தும் நீர்மையார் ஏந்தினார் - ஒப்பனைக்குரிய மகளிர் அணியை ஏந்தினார்.
|
(வி - ம்.) 'ஆய்தல்' - உள்ளதன் நுணுக்கம் (தொல். உரி. 52.) மானிற ஆய்பொன்' என்றும் பாடம்.
|
( 44 ) |
2422 |
ஈரங் கொன்றபி னிருண்ம ணிச்சுடர் | |
|
நீர வாய்நிழ லுமிழுங் குஞ்சியை | |
|
யார கிற்புகை வெறியி னாலமைத் | |
|
தோ்ப டச்செய்தா ரெழுதிற் றென்னவே. | |
|
(இ - ள்.) இருள் மணிச்சுடர் நீரவாய் நிழல் உமிழும் குஞ்சியை - இருண்ட நீலமணியின் ஒளிபெற்ற இயல்பினவாய் ஒளி உமிழும் குஞ்சியை; ஈரம் கொன்றபின் - ஆற்றின பிறகு; ஆர்அகில் புகை வெறியினால் அமைத்து - நிறைந்த அகிற்புகையின் மணத்தாலே அமைத்து; எழுதிற்று என்ன ஏர்படச் செய்தார் - எழுதினது என்னும்படி அழகுபட முடித்தார்.
|
(வி - ம்.) ஈரம் கொன்று என்றது ஈரம் இல்லையாய் உணர்த்திய பின்னர் என்றவாறு. இருள் மணி - நீலமணி. நீரவாய் - இயல்புடையனவாக. நிழல் - ஒளி. குஞ்சி - ஆண்மயிர் வெறி - மணம். ஏர் - அழகு.
|
( 45 ) |
2423 |
ஈடில் சந்தன மேந்து தாமரைத் | |
|
தோடின் பயில்வினாற் பூசித் தூமலர் | |
|
வீடு பெற்றன வின்றொ டென்னவே | |
|
சூடி னானரோ சுரும்புண் கண்ணியே. | |
|
(இ - ள்.) ஈடு இல் சந்தனம் - உவமையற்ற சந்தனத்தை: ஏந்து தாமரைத் தோடின் பயில்வினால் பூசி - ஏந்திய தாமரையிதழின் கனத்துடன் பூசி; தூமலர் இன்றொடு வீடு பெற்றன
|