பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1376 

2439 கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்
  கமழ்பூ நெரித்து வாங்கிக்
கிள்ளை வளைவா ருகிரிற் கிள்ளித்
  திலகந் திகழப் பொறித்துத்
தௌ்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்
  திருநீர் நுதலின் னப்பி
யுள்ளம் பருகி மதர்த்த வாட்கண்
  ணுருவம் மையிற் புனைந்தாள்.

   (இ - ள்.) கள்ளும் தேனும் ஒழுகும் - மதுவும் வண்டும் சிந்துகின்ற; கமழ் குவளைப்பூ - மணமுறுங் குவளை மலரை; கிள்ளை வளைவாய் உகிரின் கிள்ளி - கிளியின் வளைந்தவாய்போலும் நகத்தாலே கிள்ளி; நெரித்து வாங்கி - (மயிரைக்) கோத்து வாங்கி (அதனுள்ளே); திகழப் பொறித்து - விளங்க வைத்து; தௌ்ளும் மணிசெய் சுண்ணம் திலகம் - தௌ்ளிய மணிச் சுண்ணத்தாலே அமைந்த பொட்டை; இலங்கத் திருநீர் நுதலின் அப்பி - விளங்குமாறு அழகிய தண்மையுடைய நுதலிலே அப்பி; உள்ளம் பருகி மதர்த்த வாள்கண் - கணவனுள்ளத்தைப் பருகிச் செருக்கிய வாள்னைய கண்ணை; உருவம் மையில் புனைந்தாள் - நிறமுடைய மையாலே புனைந்தாள்.

   (வி - ம்.) பொறித்து - எழுதினாற் போல வைத்து.

   கள்ளும் என்பதற்கு - களவுகாணும் எனப் பொருள் கூறி கிள்ளையின் வளைவாய்தான் தன் றன்மையைக் கள்ளும் என்றார்; கமழ்தேனும் பொசியும் அளவன்றி ஒழுகும் குவளைப்பூ என்க என்றார் நச்சினார்க்கினியர். வண்டு ஒழுகும் என்றல் மரபன்று என்று கருதி இங்ஙனம் கூறினர். கணவனுள்ளத்தைப் பருகி என்க.

( 62 )
2440 நாகம் மருப்பி னியன்ற தோடுந்
  நலங்கொள் கறவுக் குழையும்
போக நீக்கிப் பொருவிஃ றிருவில்
  லுமிழ்ந்து மின்னுப் பொழியு
மேக மாகி யெரியும் மணியின்
  னியன்ற கடிப்பு வாங்கி
மேக விசும்பிற் றேவர் விழைய
  விளங்கச் சோ்த்தி னாளே.

   (இ - ள்.) நாகம் மருப்பின் இயன்ற தோடும் - யானைத் தந்தத்தால் ஆன தோட்டையும்; நலங்கொள் சுறவுக் குழையும் - அழகுறும் மகரக் குழையையும்; போக நீக்கி - காதினின்றும