பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1379 

படுகணை மறந்து - இசையிற் குலவி வண்டு பாடும் தேன் உண்டாகும் மலர்க்கணையை எய்ய மறந்து; கடிய காண்கிலேன் என்னா - இங்ஙனம் கடியன பார்த்திலேன் என்று கருதி; உருகி மெய் கரந்திட்டான் - (மனம்) உருகி இவள் மெய்யிலே மறைந்து வேட்கையை விளைத்திட்டான்.

   (வி - ம்.) மெய் கரந்திட்டான் என்றது அநங்கனானான் என்றபடி.

   சுமக்கலாத நாண் உடைய நங்கை என இயைக்க. பெண்மைப் பண்பு நான்கனுள் நாணமே சிறந்தமை பற்றி அதன் மிகுதி கூறுவார் இங்ஙனம் கூறினர். நகை - ஒளி. சுமக்கலாத பூண் பொன்ஞாண் வடத்தொடு புரள என மாறுக.

( 66 )
2444 அவாக்கிடந் தகன்ற வல்கு
  லணிகிளர் திருவிற் பூப்பத்
தவாக்கதிர்க் காசு கண்டா
  ராவியைத் தளரச் சூட்டிக்
கவாய்க்கிடந் தணங்கு நாறுங்
  கண்கொளாப் பட்டு டுத்தா
ளுவாக்கதிர்க் திங்க ளம்மென்
  கதிர்விரித் துடுத்த தொத்தாள்.

   (இ - ள்.) கண்டார் ஆவி தளர - பா£த்தவர் உயிர் சோர்வடைய ; தவாக்கதிர்க் காசு - கெடாத ஒளியையுடைய காசுகள்; அவாக் கிடந்து அகன்ற அல்குல் - அவாவின் தன்மை கிடந்து அகன்ற அல்குலிலே; அணிகிளர் திருவில் பூப்பச் சூட்டி - அழகு விளங்கும் வானவில் போலத் தோன்ற அணிந்து; கவாய்க் கிடந்து அணங்கு நாறும் கண்கொளாப் பட்டு உடுத்தாள் - கவ்விக் கிடந்து தெய்வத் தன்மை தோன்றும் இழைதெரியாத பட்டை உடுத்தவள்; உவாக்கதிர்த் திங்கள் அம் மென்கதிர் விரித்து உடுத்தது ஒத்தாள் - நிறைந்த கதிரையுடைய திங்கள் தன் அழகிய மெல்லிய கதிரை விரித்து உடுத்த தன்மையை ஒத்தாள்.

   (வி - ம்.) ஆவியை : ஐ : அசை. கண்கொளா - இழை தெரியாத. 'இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம்' (மலைபடு. 561). 'அணிந்தாள்' என்று பாடமாயின், விலாசி அணிந்தாள் என்க.

( 67 )
2445 இடைச்செறி குறங்கு கௌவிக்
  கிம்புரி யிளக மின்னும்
புடைச்சிறு பரடு புல்லிக்
  கிண்கிணி சிலம்போ டார்ப்ப