| நாமகள் இலம்பகம் |
138 |
|
| 255 |
கோணிலை திரிந்து நாழி |
| |
குறைபடப் பகல்கண் மிஞ்சி |
| |
நீணில மாரி யின்றி |
| |
விளைவஃகிப் பசியு நீடிப் |
| |
பூண்முலை மகளிர் பொற்பிற் |
| |
கற்பழிந் தறங்கண் மாறி |
| |
யாணையிவ் வுலகு கேடா |
| |
மரசு கோல் கோடி னென்றான். |
|
|
(இ - ள்.) அரசுகோல் கோடின் - அரசன் முறைமை கெடுவானானால்; கோள்நிலை திரிந்து - கோள் நிற்கும் நிலைகுலைந்து; நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி - (இரவு) நாழிகை குறையப் பகற்பொழுது மிகுந்து; மாரிஇன்றி நீள்நிலம் விளைவுஅஃகி - மழையில்லாமற் பெருநிலமும் விளைவு குறைந்து; பசியும் நீடி - பசியும் நீட்டித்து; பொற்பின் பூண்முலை மகளிர் கற்பு அழிந்து - அழகிய பூணணிந்த முலையையுடைய பெண்களின் கற்புக்கெட்டு; அறங்கள் மாறி இவ்வுலகு கேடாம் - அறச்சாலைகளும் இன்றி இவ்வுலகுகெடும்; ஆணை என்றான்-இஃது அரசனுடைய ஆணையே ஆகும் என்றான்.
|
|
|
(வி - ம்.) கட்டியங்காரன் கொலை குறித்ததும் அரசன் அவற்கு அரசளித்ததும் உட்கொண்டு இவ்விரண்டு கவியும் பொதுவாகக் கூறினான். எச்சங்கள், செயப்படுபொருளன.
|
|
|
கோள் - ஞாயிறு முதலியன. நிலை என்பது நன்னிலை என்பது பட நின்றது. இச் செய்யுளின்கண் கொடுங்கோலால் விளையும் தீமை நன்கு விளக்கப்படுதல் காண்க. இதனுடன்,
|
|
| |
”கோனிலை திரிந்திடின் கோணிலை திரியும் |
|
| |
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் |
|
| |
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை”. (மணி. 7 : 7-9) |
|
|
எனவரும் மணிமேகலைப் பகுதியையும் நினைக.
|
( 226 ) |
| 256 |
தார்ப்பொலி தரும தத்தன் |
| |
றக்கவா றுரைப்பக் குன்றிற் |
| |
கார்த்திகை விளக்கிட்ட டன்ன |
| |
கடிகமழ் குவளைப் பைந்தார் |
| |
போர்த்தத னகல மெல்லாம் |
| |
பொள்ளென வியர்த்துப் பொங்கி |
| |
நீர்க்கடன் மகரப் பேழ்வாய் |
| |
மதனன்மற் றிதனைச் சொன்னான். |
|