| முத்தி இலம்பகம் | 
1380  | 
 | 
  | 
|  2445 | 
நடைச்சிறு பாதங் கோல |   |  
|   | 
  மணிவிர லணிந்து நாகத் |   |  
|   | 
துடைச்சிறு நாவிற் றோகை |   |  
|   | 
  யிரீஇயினண் மாலை சோ்ந்தாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) புடைக் கிம்புரி இடைச்செறி குறங்கு கௌவி இளக - ஒருகூறு கிம்புரி வடிவான குறங்கு செறி என்னும் அணி குறங்கைக் கௌவி நெகிழவும்; சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - சிறுகணைக் காலைப் பற்றியவாறு கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்பவும்; நடைச் சிறுபாதம் அணிவிரல் கோலம் அணிந்து - நடைக்குரிய சிற்றடியிலும் அழகிய விரலிலும் அணிவனவற்றையும் அணிந்து, நாகத்துடை சிறு நாவின் தோகை இரீஇயினள் - பாம்பினது சிறு நாவைப்போலும் முன்தானையை விலாசி இருத்திவிட்டான்; மாலை சேர்ந்தாள் - பிறகு அலங்கார மாலை வந்தாள். 
 | 
| 
    (வி - ம்.) குறங்குசெறி - துடையில் அணியும் ஓரணிகலன். குறங்கு - துடை. கிம்புரி இடைச்செறி என மாறுக. நாகத்தடை - நாகத்தினுடைய. தோகை - முன்றானை : உவமவாகுபெயர், இரீஇயினாள் - வைத்தாள். மாலை - அலங்காரமாலை; தோழி. 
 | 
( 68 ) | 
|  2446 | 
அம்மல ரடியுங் கையு |   |  
|   | 
  மணிகிளர் பவழ வாயுஞ் |   |  
|   | 
செம்மலர் நுதலு நாவுந் |   |  
|   | 
  திருந்தொளி யுகிரோ டங்கேழ் |   |  
|   | 
விம்மிதப் பட்டு வீழ |   |  
|   | 
  வலத்தக மெழுதி யிட்டா |   |  
|   | 
ளம்மலர்க் கண்ட முள்ளிட் |   |  
|   | 
  டரிவையைத் தெரிவை தானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அரிவையை - இலக்கணையை; அம் மலர்க் கண்டம் உள்ளிட்டு - அழகிய மலர்மாலை அணிந்த கழுத்தை யுள்ளிட்டு; அம் மலர் அடியும் கையும் அணிகிளர் பவழ வாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு - மலரனைய அடியும் கையும் அழகிய பவழமனைய வாயும் மாலை அணிந்த நெற்றியும் நாவும் அழகிய ஒளியையுடைய நகத்துடன்; விம்மிதப் பட்டு வீழ அம்கேழ் அலத்தகம் எழுதியிட்டான் - வியப்புற்று விரும்புபடி ஒளியுடைய செந்நிறத்தை எழுதினாள். 
 | 
| 
    (வி - ம்.) இக் கோலம் பிற்காலத்தில் வழங்கப் பெறாதாயிற் றென்பர். 
 |