பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1381 

   அ மலர் அடி - அழகிய மலர்போலும் அடி, அணி - அழகு, உகிர் - நகம், விம்மிதம் - வியப்பு, கண்டம் - கழுத்து. அரிவை என்றது இலக்கணையை தெரிவை - அலங்காராமாலை. செம்மலர் - நெற்றிமாலை என்பர் நச்சினார்க்கினியர்.

( 69 )
2447 வாண்மதர் மழைக்க ணோக்கி
  வருமுலைத் தடமு நோக்கிக்
காண்வர வகன்ற வல்குற்
  கண்விருப் புற்று நோக்கிப்
பாணுவண் டாற்றுங் கோலச்
  சிகழிகைப் படியு நோக்கி
யாண்விருப் புற்று நின்றா
  ரவ்வளைத் தோளி னாரே.

   (இ - ள்.) வாள் மதர் மழைக்கண் நோக்கி - ஒளிபொருந்திய மதர்த்த மழைக்கண்களைப் பார்த்து; வருமுலைத் தடமும் நோக்கி - வளரும் முலைகளையும் பார்த்து; காண்வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி - அழகுவரப் பரந்த அல்குலைக் கண்ணால் விருப்புற்றுப் பார்த்து; பாணு வண்டு அரற்றும் கோலச் சிகழிகைப் படியும் நோக்கி - இசையுடைய வண்டுகள் முரலும் அழகிய மயிர் முடியின் அமைப்பையும் நோக்கி; அவ்வளைத் தோளினார் ஆண் விருப்புற்று நின்றார் - அழுகிய வளையணிந்த தொளையுடைய மகளிர் (அவளை நுகர்தற்குரிய) ஆண்மையை விருப்புற்று நின்றனர்.

   (வி - ம்.) வாள்கண், மதர்க்கண், மழைக்கண் என்க. வருமுலை : வினைத்தொகை காண் - அழகு : காட்சி, பாணு - பண், சிகழிகை - மயிர்முடி.

( 70 )

வேறு

2448 தெருள்கலான் படைத்தவன் காணிற் செவ்வனே
மருள்கலா தவர்களு மருள்வர் மம்மர்நோ
யிருளிலா ரெங்ஙன முய்வ ரின்னதா
லருளிலா ரவணல மணிந்த வண்ணமே.

   (இ - ள்.) அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணம் இன்னது - அருளில்லாத மகளிர் இலக்கணையின் அழகை அணிந்த வண்ணம் இவ்வாறு பெண்டிரும் ஆண்மையை விரும்பும் பெற்றியதாயிருந்தது; படைத்தவன் காணின் தெருள் கலான் - இனி, இவளைப் படைத்த நான்முகன் கண்டால் தான் படைத்த வடிவம் எனத் தெளியான்; மருள்கலாதவர்களும் செவ்வனே மருள்வர் - மயங்காத முனிவரும் நேரே மயங்குவர்; மம்மா