பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1387 

   என்பது திருக்குறள் (1083). வண்ணித்தல் - புனைந்துரைத்தல். பெண் - பெண்மைத் தன்மை, கண்ணிற்று - கண்ணையுடையது.

( 81 )
2459 அரத்தக மருளிச் செய்த
  சீறடி யளிய தம்மாற்
குரற்சிலம் பொலிப்பச் சென்னிக்
  குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான்
றிருக்குவாய்க் கிடந்த மார்பிற்
  சீவக னாங்க ளெல்லாந்
தரித்திலந் தவத்தை யென்று
  தார்மன்ன ரேமுற் றாரே.

   (இ - ள்.) மருளி அரத்தகம் செய்த அளிய சீறடி தம்மால் - (பிறர்) மருளச் செம்பஞ்சி யூட்டிய அளியன வாகிய சிற்றடிகளாலே; சிலம்புக் குரல் ஒலிப்பச் சென்னிக் குஞ்சிமேல் மிதிப்ப நோற்றான் - சிலம்பிற் குரல் எழ முடியிற் குஞ்சியின்மேல் மிதிக்கும்படி நோற்றவன்; திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் - திருமகள் குல்விக் கிடந்த மார்பினையுடைய சீவகனே; நாங்கள் எல்லாம் தவத்தைத் தரித்திலம் என்று - யாங்கள் எல்லாம் அதற்குத் தவம் புரிந்திலேம் என்று; தார் மன்னர் ஏமுற்றார் - தாரணிந்த அரசர் மயக்குற்றார்.

   (வி - ம்.) மருளி - மருள : எச்சத்திரிபு.

   அரத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. அளிய - அளிக்கத்தக்கன. சென்னிக்குஞ்சி - தலைமயிர்.

( 82 )
2460 கோவிந்த னென்னுஞ் செம்பொற்
  குன்றின்மேற் பிறந்து கூர்வேற்
சீவக னென்னுஞ் செந்நீர்ப்
  பவளமா கடலுட் பாய்வான்
பூவுந்தி யமுத யாறு
  பூங்கொடி நுடங்கப் போந்து
தாவிரி வேள்விச் சாலை
  மடுவினுட் டாழ்ந்த தன்றே.

   (இ - ள்.) பூ உந்தி அமுத யாறு - மலர் உந்தியை உடைய அமுதமாகிய யாறு; கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின்மேல் பிறந்து - கோவிந்தன் என்னும் பொன்மலையிலே பிறந்து; கூர்வேல் சீவகன் என்னும் செந்நீர்ப் பவளமா கடலுள் பாய்வான் - கூரிய வேலையுடைய சீவகன் என்கிற புதிய நீரையுடைய