முத்தி இலம்பகம் |
1388 |
|
|
பவளப் பெருங் கடலிலே சேரவேண்டி; பூங்கொடி நுடங்கப் போந்து - மலர்க்கொடி அசைய வந்து; தாஇரி வேள்விச்சாலை மடுவினுள் தாழ்ந்தது - குற்றமற்ற வேள்விச்சாலையாகிய மடுவிலே (சிறிது பொழுது) தங்கிறது.
|
(வி - ம்.) செந்நீர் - புதுநீர். உந்தி, கொப்பூழையும் ஆற்றிடைக் குறையையும்; கொடி, இடையையும் படர்கொடியையும் உணர்த்தும். பூவுந்தி : உவமமும் வேற்றுமையுந் தொக்கன என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 83 ) |
2461 |
சாணிடை நெடிய வாட்கண் | |
|
டளையவிழ் குவளை பூப்பப் | |
|
பூணுடை முலையின் பாரம் | |
|
பொறுக்கலாச் சுளிவின் மேலு | |
|
நாணட நடுங்கிக் கையா | |
|
னகைமுகம் புதைத்த தோற்றஞ் | |
|
சேணிடை யரவு சோ்ந்த | |
|
திங்களை யொத்த தன்றே. | |
|
(இ - ள்.) பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலும் - பூணணிந்த முலைகளின் சுவையைச் சுமக்க முடியாத வருத்தத்தின் மேலும்; நாண் அட நடுங்கி - நாண் வருத்தலாலே நடுங்கி; சாணிடை நெடிய வாள்கண் தளை அவிழ் குவளை பூப்ப - நடுவு சாணளவாக நெடிய வாளனைய கண் அலர்கின்ற குவளை போலப் பொலிவுறும்படி; கையால் நகைமுகம் புதைத்த தோற்றம் - கையினால் முறுவலையுடைய முகத்தைப் புதைத்த காட்சி; சேணிடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது - விசும்பிடையிலே பாம்பு பற்றிய திங்களைப் போன்றது.
|
(வி - ம்.) கையிடையே கண் தோன்றுதலின், அலர்கின்றாற் போன்றது என்றார். நாணத்தால் முகம் புதைத்தாள்.
|
( 84 ) |
2462 |
முத்துமிழ் திரைக ளங்க | |
|
மொய்கொள் பா தால முத்தீ | |
|
யொத்தன வேலை வேள்வி | |
|
யொலிகட னான்கு நாண | |
|
வைத்தநான் மறையு நீந்தி | |
|
வான் குண மென்னுஞ் சாலி | |
|
வித்திமே லுலகத் தின்பம் | |
|
விளைத்து மெய் கண்டநீரார். | |
|