முத்தி இலம்பகம் |
1392 |
|
|
(வி - ம்.) என்ப : அசை.
|
தண்டிலம் - ஓமம் பண்ணுதற்குக் குறிப்பிட்ட இடம். துடுப்பு - அகப்பை. தீ வலஞ்சுழன்று எழுந்தது உலகில் திருமிகுதற்கு ஏது வென்க. திரு - செல்வம்.
|
( 89 ) |
2467 |
கரையுடைத் துகிலிற் றோன்றுங் | |
|
காஞ்சன வட்டின் முந்நீர்த் | |
|
திரையிடை வியாழந் தோன்றத் | |
|
திண்பிணி முழுவுஞ் சங்கு | |
|
முரசொடு முழங்கி யார்ப்ப | |
|
மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப | |
|
வரசரு ளரச னாய்பொற் | |
|
கலசநீ ரங்கை யேற்றான். | |
|
வி-ம்.) தீயை வளர்த்து நீர் விடுதலும் (உதகம் பண்ணுதலும்) உளதாதலின், இங்ஙனம் கூறினார்.
|
( 90 ) |
2468 |
குளிர்மதி கொண்ட நாகங் | |
|
கோளைவிடுக் கின்ற தேபோற் | |
|
றளிர்புரை கோதை மாதர் | |
|
தாமரை முகத்தைச் சோ்ந்த | |
|
வொளிர்வளைக் கையைச் செல்வன் | |
|
விடுத்தவ ளிடக்கை பற்றி | |
|
வளரெரி வலங்கொண் டாய்பொற் | |
|
கட்டிறா னேறி னானே. | |
|
(இ - ள்.) நாகம் குளிர் மதி கொண்ட கோளை - அரவு தான் திங்களைக் கொண்ட கோளை; விடுக்கின்றதே போல் - விடுக்கின்றாற் போல; தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த - தளிரனைய இலக்கணையின் அழகிய தாமரை மலர் போன்ற முகத்தை மூடிய; ஒளிர் வளைக்கையைக் செல்வன்
|