முத்தி இலம்பகம் |
1397 |
|
|
2476 |
விரிகதி ரார மின்னித் | |
|
தாரெனுந் திருவில் வீசிக் | |
|
குரிசின்மா மேகம் பெய்த/span> |
|
கொழும்புயற் காம மாரி | |
|
யரிவைதன் னெஞ்ச மென்னு | |
|
மகன்குள நிறைந்து வாட்கட் | |
|
கரியமை சேறு சிந்திக் | |
|
கலிங்குக டிறந்த வன்றே. | |
|
(இ - ள்.) குரிசில் மா மேகம் - சீவகனாகிய பெரிய முகில்; விரிகதிர் ஆரம் மின்னி - விரிந்த ஒளியையுடைய ஆரமாகிய மின்னை மின்னி; தார் எனும் திருவில் வீசி - மாலையாகிய வான வில்லையிட்டு; பெய்த கொழும்புயல் காமமாரி - பெய்த வளமிகு நீரையுடைய காமமாகிய மாரியாலே; அரிவைதன் நெஞ்சம் என்னும் அகன்குளம் நிறைந்து - இலக்கணையின் உள்ளம் என்கிற அகன்ற குளத்திலே நிறைந்து; வாள்கண் கலிங்குகள் கரி அமை சேறு சிந்தி - வாளனைய கண்ணாகிய கலிங்குகள் மையாகிய அமைந்த சேற்றினைச் சிந்தி; திறந்த - திறந்தன.
|
(வி - ம்.) என்றது, அவன் விளைத்த காம இன்பம் நிறைதலின், உவமைக் கண்ணீர் வீழ்த்தின என்றவாறு. புயல் - நீர். 'புயலன்றலர் சடை ஏற்றவன்' (சிற் - 240) என்றார்.
|
( 99 ) |
2477 |
தோக்கையந் துகிலி னாடன் | |
|
றுணைமுலை பொருது சேந்த | |
|
வேக்கொசி விலாத வில்லா | |
|
னிடுகொடி யகல மின்றேன் | |
|
றேக்கிவண் டிமிருங் கோதை | |
|
செல்வன்றா ருழக்க நைந்து | |
|
பூக்கொய்து துவண்ட கொம்பின் | |
|
பொற்பின ளாயி னாளே. | |
|
(இ - ள்.) ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடுகொடி அகலம் - எய்தற் றொழிலுக்குக் கெடுதலில்லாத வில்லையுடைய சீவகனது கொடி எழுதப்பட்ட மார்பாகிய மலையோடு; தோக்கை அம் துகிலினாள் தன் - கொய்சகமுடைய அழகிய ஆடையினையுடைய இலக்கணையினுடைய; துணைமுலை பொருது சேந்த - முலைகளாகிய யானைகள் முதலில் பொருது சிவந்தன; செல்வன் தார் உழக்க - அது பொறாமல் சீவகனுடைய தார் (தூசிப்படை) பின்பு பொருதலாலே; இன் தேன் தேக்கி வண்டு இமிரு
|