நாமகள் இலம்பகம் |
140 |
|
258 |
நுண்முத்த மேற்றி யாங்கு |
|
மெய்யெலாம் வியர்த்து நொய்தின் |
|
வண்முத்த நிரைகொ ணெற்றி |
|
வார்முரி புருவ மாக்கிக் |
|
கண்ணெரி தவழ வண்கை |
|
மணிநகு கடக மெற்றா |
|
வெண்ணகை வெகுண்டு நக்குக் |
|
கட்டியங் காரன் சொன்னான். |
|
(இ - ள்.) நுண்முத்தம் ஏற்றியாங்கு மெய்எலாம் நொய்தின் வியர்த்து - நுண்ணிய முத்துக்களைப் பதித்தாற்போல உடலெங்கும் விரைவிலே வியர்த்து; வண்முத்தம் நிரைகொள் நெற்றி வார்முரி புருவம் ஆக்கி - அந்த வியர்வை நிறைத்த நெற்றியிலே நீண்ட வளைந்த புருவத்தை ஏற்றி; கண்எரி தவழ - கண்களில் அனல் பரவ; வண்கை மணிநகு கடகம் எற்றா- வளமிகு கையிலே மணிகள் ஒளிரும் கடகத்தை உடைத்து; வெள்நகை வெகுண்டு நக்கு - வெடி நகைப்பாக வெகுண்டு நகைத்து; கட்டியங்காரன் சொன்னான் - கட்டியங்காரன் உரைத்தான்.
|
|
(வி - ம்.) இதன்கண்ணும் கட்டியங்காரன் வெகுளுதற்கும் நகைத்தற்கும் வேண்டிய காரணமில்லாதவிடத்தும் கடுஞ்சினமும் பெருஞ்சிரிப்பும் உடையன் என அவன் பேதைமையை விளக்குதல் அறிக.
|
|
வெண்ணகை - வெண்மை காரணமாகப் பிறக்கும் நகை. வெண்மையை வெகுளிக்கும் ஏற்றுக.
|
( 229 ) |
259 |
என்னலாற் பிறர்கள் யாரே |
|
யின்னவை பொறுக்கு நீரா |
|
ருன்னலாற் பிறர்கள் யாரே |
|
யுற்றவற் குறாத சூழ்வார் |
|
மன்னன்போய்த் துறக்க மாண்டு |
|
வானவர்க் கிறைவ னாகப் |
|
பொன்னெலாம் விளைந்து பூமி |
|
பொலியயான் காப்ப லென்றான். |
|
(இ - ள்.) இன்னவை பொறுக்கும் நீரார் என் அலால் பிறர்கள் யார்? - நீ கூறிய இக் கடிய சொற்களைப் பொறுக்கும் இயல்பினார் என்னை அல்லாமல் வேறு யார்?; உற்றவற்கு உறாத சூழ்வார் உன்னலால் பிறர்கள் யார்?- தம்மைச் சார்ந்தவனுக்கு ஒவ்வாத செயல்களைச் சூழ்கின்றவர் உன்னை யொழிய வேறு யார்? (இனி அமைக); மன்னன் துறக்கம் போய் ஆண்டு வானவர்க்கு இறை
|
|