முத்தி இலம்பகம் |
1402 |
|
|
2486 |
உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள் | |
|
கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால் | |
|
செழுந்துபடச் செந்நெனிறைத் தந்நுண்கொடி யறுகின் | |
|
கொழுந்துகுறைத் தணிந்துகொலை வேற்கணவ ரமைத்தார். | |
|
(இ - ள்.) உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அருங்கலங்கள் கொழுந்து படக் கூப்பி - உழுந்து முதலாகக் கூறப் பட்டவற்றைக் கொழுந்துபடக் கூப்பி; நனி ஆயிரம் மரக்கால் செழுந்துபடச் செந்நெல் நிறைத்து - நன்றாக, ஆயிரம் மரக்காலிலே வளமைப்படச் செந்நெல்லை நிறைத்து. அம் நுண்கொடி அறுகின் கொழுந்து குறைத்து அணிந்து - (அவற்றிலே) அழகிய நுண்ணிய கொடி அறுகம் புல்லின் கொழுந்தைக் கிள்ளி அணிந்து; கொலை வேல் கணவர் அமைத்தார் - கொலை புரியும் வேற்கண் மங்கையர் இவ்வாறு அமைத்தனர்.
|
(வி - ம்.) செழுந்து : உரிச்சொல் ஈறு திரிந்தது.
|
இச் செய்யுளோடு ”கொழுங்களி உழுந்தும் செழுங்கதிர்ச் செந்நெலும், உப்பும் அரிசியும், கப்புரப் பளிதமொடு, ஐவகை வாசமும் கை புனைந்தியற்றிய, முக்கூட்டமிர்தும் அக்கூட்டமைத்து” எனவரும் பெருங்கதைப் பகுதி (2-4 : 88-91) ஒப்புநோக்கற்பாலது.
|
( 109 ) |
2487 |
செங்கய லிரட்டைதிரு வார்சுடர்க ணாடி | |
|
பொங்குகொடி வார்முரசந் தோட்டிபுணர் கும்ப | |
|
மங்கலங்க ளெட்டுமிவை மணியிற்புனைந் தேந்தி | |
|
யங்கயற்க ணரிவையர்க டென்கிழக்கி னின்றார். | |
|
(இ - ள்.) அம்கயற் கண் அரிவையர்கள் மணியின் புனைந்து - அழகிய கயற்கண் மங்கையர்கள் தம்மை மணியாலே புனைந்து கொண்டு; செங்கயல் இரட்டை - சிவந்த இணைக்கயல்களும்; திருவார் - சாமரையும்; சுடர் - விளக்கும்; கணாடி - கண்ணாடியும்; பொங்கு கொடி - கிளருங்கொடியும்; வார் முரசம் - வாரால் இறுகிய முரசமும்; தோட்டி - அங்குசமும்; புணர் கும்பம் - இரட்டை (நீர் நிறை) குடமும்; மங்கலங்கள் இவை எட்டும் - மங்கலப் பொருள்களாகிய இவை எட்டையும்; ஏந்தித் தென் கிழக்கில் நின்றார் - சுமந்து தென் கிழக்கில் நின்றனர்.
|
(வி - ம்.) திருவாரென்றது சாமரை அடியை. இனி, கும்பத்தோடு புணர்ந்த மங்கலங்கள் எட்டுமெனவே சாமரை கூறிற்றென்றுமாம்.
|
( 110 ) |
2488 |
வெள்ளுருவ மாலைவட கீழிருவர் மின்போ | |
|
லொள்ளுருவ வாளுருவி நின்றனர்தென் மேல்பா | |
|
லுள்ளுருக நோக்கியுய ருழுத்தகலு மேந்திக் | |
|
கள்ளுருவ மாலையவர் கைதொழுது நின்றார். | |
|