பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1404 

ளுடன் புத்தொளி வீசி அமர்ந்திருந்ததைப்போல; வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமான் - வானிலே உயர்ந்தோங்கிய குடையையுடைய அரசர் பெருமான்; வேல் நிரைசெய் கண்ணியொடு மெல்லென இருந்தான் - வேலென ஒழுங்குறுங் கண்ணியோடு அமைந்திருந்தான்.

   (வி - ம்.) செய் : உவமைச் சொல். நொய்ய - மெத்தென்ற. தான் - அசை. இரவி - ஞாயிறு. இது சீவகனுக்குவமை. திங்கள் - இலக்கணைக்குவமை - கண்ணி : இலக்கணை. மன்னர் பெருமான் : சீவகன்.

( 113 )

வேறு

2491 குளநென் முன்றிற்கனி தேன்சொரி
  சோலைக் குளிர்மணி
வளமை மல்கியெரி யம்மட
  மந்திகை காய்த்துவா
னிளமை யாடியிருக் கும்வனத்
  தீர்ஞ்சடை மாமுனி
கிளையை நீங்கிக்கிளர் சாபத்தி
  னாவித னாயினான்.

   (இ - ள்.) குளநெல் முன்றில் - குளநெல் உணங்கும் முன்றிலிலே; கனி தேன் சொரி சோலை - கனி தேனைப் பொழியும் சோலையினிடத்தே; குளிர் மணி வளமை மல்கி எரிய - தண்ணிய மணிகள் வளம் நிறைந்து ஒளிசெய்; மடமந்தி கை காய்த்துவான் - இளமந்தி (அதனைத் தீயென எண்ணி) கையைக் காய்ச்சுதற்கு; இளமை ஆடியிருக்கும் வனத்து - இளமை யாடி இருக்கும் வனத்திலுள்ள; ஈர்ஞ்சடை மாமுனி - தண்ணிய சடையையுடைய முனியொருவன் (தன்னை ஒருவன் சபித்தலின்); கிளையை நீங்கி - சுற்றத்தை நீங்கி; கிளர் சாபத்தின் - வந்து; தோன்றின சாபத்தாலே; நாவிதன் ஆயினான் - நாவிதன் ஆனான்.

   (வி - ம்.) இளமையாடுதல் : ஒன்றை மற்றொன்றாக எண்ணி மயங்குதல்.

   குளநெல் - ஒருவகை நெல். குளநெல் உணங்கும் முன்றில் என்க. எரியம்மடமந்தி என்புழி வண்ண நோக்கி மகரவொற்று விரிந்து நின்றது. காய்த்துவான் : வினையெச்சம். நாவிதன் - மயிர்வினைஞன்.

( 114 )
2492 ஆய்ந்த கேள்வி யவன்கான்
  முளையாய்வழித் தோன்றினான்
றோய்ந்த கேள்வித் துறைபோ
  யலங்காரமுந் தோற்றினான்.