முத்தி இலம்பகம் |
1407 |
|
|
(இ - ள்.) வாக்கினில் செய்த பொன்வாள் - (நூல் விதியுடன்) வாக்குண்டாகப் பொன்னாற் செய்த கத்தியை; மங்கல விதியின் ஏந்தி - மங்கல விதிப்படி எடுத்து; ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வலக்கவுள் உறுத்தி - அமைத்த முகூர்த்தத்திலே அண்ணலின் வலப்பக்கக் கவுகளிலே தொட்டு; தேன்கண் இன் அகிலின் ஆவி - தேன் கலந்த இனிய அகிற்புகை; தேக்கிடும் குழலினாளை - தங்கியு கூந்தலுடையாளை; நுனித்து நோக்கலன் - கூர்ந்து பார்க்காதவனாய்ச் (சிறிது பார்த்து); இடக்கவுள் நொய்தா உறுத்தினான் - இடக்கவுளிலே சிறிது தொட்டான்.
|
(வி - ம்.) ஆடவர்க்கு வலக்கவுளினும் மகளிர்க்கு இடக்கவுளினும் உறுத்துதல் மரபு. ”மின்வாள் அழித்த மேதகு கைவினைப் பொன்வாள் பற்றிப்பன்மாண் பொலிகென வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி” என்றார் பெருங் கதையினும் (2 - 4 : 161 - 3).
|
( 118 ) |
2496 |
ஆய்ந்தபொன் வாளை நீக்கி | |
|
யவிர்மதிப் பாகக் கன்மேற் | |
|
காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப் | |
|
பூநிறீஇக் காமர் பொன்ஞாண் | |
|
டோய்ந்ததன் குறங்கில் வைத்துத் | |
|
துகிலினிற் றுடைத்துத் தூய்தா | |
|
வாய்ந்தகைப் புரட்டி மாதோ | |
|
மருடகப் பற்றி னானே. | |
|
(இ - ள்.) ஆய்ந்த பொன் வாளை நீக்கி - (உறுத்தின) பொற் கத்தியைப் போக்கி; காய்ந்த வாள் - (இரும்பும் எஃகும் ஒரு தன்மையாகக்) காய்ந்த மயிர்க்கத்தியை; அவிர் மதிப்பாகக் கல்மேல் கலப்பத் தேய்த்து - விளங்கும் அரைத் திங்கள்போலுங் கல்லின் மேல் நன்றாகத் தீட்டி; பூ நிறீஇ - பூவை அக் கல்லிலே நிறுத்தி; காமர் பொன்ஞாண் தோய்ந்த தன் குறங்கில் வைத்து - அழகிய பொன் கயிறு பொருந்திய தன் துடையிலே வைத்து; துகிலினில் துடைத்து - துகிலிலே துடைத்து; வாய்ந்த கை தூய் தாப் புரட்டி - பொருந்திய கையிலே தூய்தாகப் புரட்டி; மருள்தகப் பற்றினான் - உற்றது தெரியாமல் முகத்தைத் தீண்டினான்.
|
(வி - ம்.) 'பூவை நிறுத்தியிட்டு' என்ப - குனிதலின் 'பொன்நாண் தோய்ந்த குறங்' கென்றார். மாது ஓ : அசைகள்.
|
இச் செய்யுளோடு
|
”பொன் வாள் பற்றிப் பன்மாண் பொலிகென |
|
வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி |
|
இலக்கணம் பிழையா எஃகமை இருப்பின் |
|
நீரளந்தூட்டிய நிறையமை வாளினைப் |
|