பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1409 

2499 உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ
யிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர்
வெருவி யோட விசும்பிற குலாவிய
திருவிற் போற்புரு வங்க டிருத்தினான்.

   (இ - ள்.) ஒள் நிறப் புள் - ஒள்ளிய நிறமுடைய சிச்சிலிப் பறவைக்கு; உருவச் செங்கயல் வெரீஇ - அழகிய செங்கயல்கள் அஞ்சி; இரியல் உற்றன போன்று - ஓடுக்கலுற்றன போல; இணைக் கண்மலர் வெருவி ஓட - இரண்டு கண்மலர்களும் அஞ்சி ஓட; விசும்பின் குலாவிய திருவில்போல - வானில் வளைத்த வானவில் போல; புருவங்கள் திருத்தினான் - புருவங்களைத் திருத்தினான்

   (வி - ம்.) 'கண்கள் அஞ்சி பார்க்க வானில் வளைத்த திருவில்' என்பர் நச்சினார்க்கினியர். அவன் புருவந் திருத்தினபோது கண்கள் அஞ்சின என்றவே தக்கது.

( 122 )
2500 ஆர மின்ன வருங்குயந் தான்களைந்
தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழி
னீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான்
றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான்.

   (இ - ள்.) தாரன மாலைத் தயங்கு இணாக் கண்ணியான் - தாரணிந்தவனும் மாலையாக விளங்கும், பூங்கொத்துக் கலந்த கண்ணியனும் ஆகிய நாவிதன்; ஆரம் மினன அருங்குளம்தான் களைந்து - மாலை ஒளிர, அரிய மயிர்க் கத்தியை நீக்கி ஒண்திறல் கத்தரிகைத் தொழில் நீரின் செய்து - ஒள்ளிய திறலையுடைய கத்தரிகையாற் செய்யுந் தொழிலை ஒழுங்குறச் செய்து; அடி ஏத்துபு நீங்கினான் அடியை வணங்கிச் சென்றான

   (வி - ம்.) குயம் - ஈண்டு மயிர்க்கத்தி. ஓரும் : அசை. கத்தரிகையாற் செய்யும் தொழில் என்க. நீரின் - நீர்மையால். ஏத்துபு - ஏத்தி; தொழுது. கண்ணியான் - நாவிதன்.

( 123 )

வேறு

2501 அன்னப் பெடைநடுக்கி யசைந்து
  தேற்றா நடையாளு
மன்னர் குடைநடுக்கும் மாலை
  வெள்வேன் மறவோனு
மின்னு மணிக்குடத்தின் வேந்த
  ரேந்தப் புனலாடிப்
பொன்னங் கடிமலருந் துகிலுஞ்
  சாந்தும் புனைந்தாரே.