பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1411 

2503 சுடுமண் மிசைமாரி சொரியச்
  சூழ்ந்து சுமந்தெழுந்து
நெடுநன் னிமிராவி நாறு
  நெய்தோய் தளிர்மேனி
துடிநுண் ணிடைப்பெருந்தோட் டுவர்வா
  யேழை மலர்மார்பன்
கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக்
  காமக் கடலாழ்ந்தான்.

   (இ - ள்.) மாரி சுமந்து எழுந்து சூழ்ந்து சுடுமண் மிசை சொரிய - மாரி நீரைச் சுமந்து எழுந்து உலகை வலமாக வந்து வெங்கார் மண்ணிலே சொரிய; நிமிர் நெடுநல் ஆவி நாறும் - எழுகின்ற மிகுந்த நறிய ஆவிபோல நாறுகின்ற; நெய்தோய் தளிர் மேனி - நெய்யில் முழுகிய தளிர்போலும் மேனியையும்; துடி நுண் இடை - துடிபோலும் நுண்ணிய இடையையும்; பெருந்தோள் - பெரிய தோளையும்; துவர்வாய் - சிவந்த வாயையும் உடைய; ஏழை - இலக்கணை; கடிநல் மலர்ப் பள்ளி களிப்ப - மணமுடைய அழகிய மலரணையிலே களிக்கும்படி; மலர் மார்பன் காமக் கடல் ஆழ்ந்தான் - விரிந்த மார்பன் காமக் கடலிலே முழுகினான்.

   (வி - ம்.) 'எழுந்த' என்றும் பாடம்.

   சுடுமண் - ஞாயிற்றின் வெப்பத்தால் நன்கு சுடப்பட்ட மண். இதனை வெங்கார்மண் என்பது இன்றும் வழக்கிலுளது. வெங்கார் மண்ணிலே ஞெரேலென மழைபொழியுங்கால் ஓர் ஆவி தோன்றி மணப்பது இயல்பு. இம்மணம் சிறந்த மகளிர் மேனி மணத்திற்கு உவமை. துடி - உடுக்கை. துவர் - பவளம். ஏழை; இலக்கணை. மார்பன் : சீவகன்

( 126 )

வேறு

2504 வழக்கு தாரவன் மார்பிடை மட்டுகப்
புழுங்கு கோதைபொற் பின்றிறம் பேசலாம்
விழுங்கு மேகம் விடாது தழீஇக்கிடந்
தொழிந்த மின்னுக் கொடியொத் தொழிந்திட்டாள்.

   (இ - ள்.) வழங்கு தாரவன் மார்பிடை - உலகம் புகழுந் தாரணிந்த சீவகனின் மார்பிலே (தங்கிய); மட்டு உகப் புழுங்கு கோதை - மட்டைச் சிந்துதற்குப் புழுங்குங் கோதை போல்வாளுடைய; பொற்பின் திறம் பேசலாம் - அழகின் கூற்றைச் சிறிது உவமை கூறலாம்; விழுங்கும் மேகம் விடாது தழீஇக் கிடந்து - தன்னை உள்ளடக்குதற்குரிய முகிலை உள்ளடக்கி