முத்தி இலம்பகம் |
1413 |
|
|
நீர்வர, அதனைக் கண்டு; அம்ம! - கேட்பையாக!; பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல் பேதைமை என்றாள் - பிறரை நினைத்தழுபவரைக் கூடுதல் அறியாமை என்றாள்; வேதனை பெருகி வேற்கண் தீ உமிழ்ந்திட்ட. அவ்வளவிலே வருத்தம் மிகுதலின் வேலனைய கண்கள் தீயைச் சொரிந்தன.
|
(வி - ம்.) வனப்பு நோக்கிக் கண் கரிந்தது; ஆக்கம் பற்றிப் பிறந்த மருட்கை (தொல். மெய்ப். 7. பேர்) என்னும் மெய்ப்பாடு; மருட்கை என்பது வியப்பு.
|
( 129 ) |
2507 |
நாறுசாந் தழித்து மாலை | |
|
பரிந்துநன் கலன்கள் சிந்திச் | |
|
சீறுபு செம்பொ னாழி | |
|
மணிவிர னெரித்து விம்மா | |
|
வேறியு மிழிந்து மூழுழ் | |
|
புருவங்கண் முரிய நொந்து | |
|
தேறுநீர் பூத்த செந்தா | |
|
மரைமுகம் வியர்த்து நின்றாள். | |
|
(இ - ள்.) சீறுபு - (ஆகவே) சீற்றங் கொண்டு; நாறு சாந்து அழித்து - மணக்கும் சாந்தைத் திமிர்ந்து போக்கி; மாலைபரிந்து - மாலைகளை அறுத்து; நன்கலன்கள் சிந்தி - அழகிய அணிகளைச் சிந்தி; செம்பொன் ஆழி மணிவிரல் நெரித்து - பொன்ஆழி புனைந்த அழகிய விரல்களை நெரித்து; விம்மா - விம்மி; புருவங்கள் ஊழ் ஊழ் ஏறியும் இழிந்தும் முரிய - புருவங்கள் முறைமுறையே ஏறியும் இறங்கியும் முரியும்படி; நொந்து - வருந்தி; தேறுநீர் பூத்த செந்தாமரை முகம் வியர்த்து நின்றாள் - தெளிந்த நீர் துளித்த செந்தாமரை மலர் போன்று முகம் வியர்த்து நின்றாள்.
|
(வி - ம்.) நாறுசாந்து : வினைத்தொகை. பரிந்து - அறுத்து. சீறுபு - சீறி. விம்மா - விம்மி. ஊழூழ் - முறைமுறையே. முரிய - வளைய வியர்த்த முகத்திற்கு நீர் துளிக்கப்பட்ட தாமரை மலர் உவமை.
|
( 130 ) |
2508 |
இற்றதென் னாவி யென்னா | |
|
வெரிமணி யிமைக்கும் பஞ்சிச் | |
|
சிற்றடிப் போது புல்லித் | |
|
திருமகன் கிடப்பச் சேந்து | |
|
பொற்றதா மரையிற் போந்து | |
|
கருமுத்தம் பொழிப் வேபோ | |
|
லுற்றுமை கலந்து கண்கள் | |
|
வெம்பணி யுகுத்த வன்றே. | |
|