பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1415 

நங்கை வரம்தர மொழிமின் என்றான் - இந் நங்கை வரமளிக்கக் கூறுமின் என்றான்.

   (வி - ம்.) 'நின்னை விடாமற் பார்த்தலாற் கண் கரிந்து நீர் பெருகியது' என்றுரைத்தும், அவளுக்குச், 'சிதைவு பிறர்க்கின்மை' என்னும் மெய்ப்பாடு பிறத்தலின், விடை கொடாமல் நின்றாள், எனவே, அவன் வண்டுகளையும் தேன்களையும் விளித்துக் கூறினான்.

   'சிதைவு பிறர்க்கின்மை' யாவது : புணரக் கருதி உள்ளஞ் சிதைந்து நிறையழிந்துழிப் புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல்; பிறர்க்கின்மை யெனவே தலைவன் உணரும். இது கற்பிற்கும் உரித்தென்றார். இம்மெய்ப்பாடு இவட்கு நிகழ்ந்தமை தான் உணர்ந்து, இடையில் வந்த புள்ளை நோக்கி, 'இனி நுமக்கு எளிது, நீர்ஊடல் தீர்ப்பீராக' என்றான் : ஊடற்குக் காரணம் இன்றியும் இத்துணை யெல்லாம் நிகழ்ந்ததற்கு வருந்தினான் ஆதலின்.

( 132 )
2510 பூவையுங் கிளியுங் கேட்டுப்
  புழைமுகம் வைத்து நோக்கிக்
காவலன் மடந்தை யுள்ளங்
  கற்கொலோ விரும்பு கொல்லோ
சாவம்யா முருகி யொன்றுந்
  தவறில னருளு நங்கை
பாவையென் றிரத்து மென்ற
  பறவைக டம்முட் டாமே.

   (இ - ள்.) பூவையும் கிளியும் கேட்டு - (அவன் வருத்தத்தைப்) பூவையும் கிள்ளையும் கேட்டு; புழைமுகம் வைத்து நோக்கி - கூட்டின் வாயிலிலே முகத்தை வைத்துப் பார்த்து; தம்முள் தாம் - தம்மிற்றாம்; காவலன் மடந்தை உள்ளம் கல் கொல்லோ? இரும்பு கொல்லோ? - இவ்வரசனின் தேவி மனம் கல்லோ? இரும்போ?; யாம் உருகிச் சாவம் - யாமெனின் இவ்வாறு வேண்டி ஊடல் தீர்ப்பின் தகாதென்று கருதி மனமுருகி இறந்துபடுவோம்; நங்கை! பாவை! ஒன்றும் தவறிலன் அருள் - நங்கையே! பாவையே! சிறிதும் தவறு இலன் அருள்வாய்; என்று இரத்தும் என்ற - என்று வேண்டுவோம் என்றன.

   (வி - ம்.) அவள் ஊடல் தீரக் கருதிய தன்மையை அவை தெளியாமையின், இவன் இறந்து படும் எனக்கருதி இங்ஙனம் கூறின.

( 133 )
2511 பெற்றகூ ழுண்டு நாளும்
  பிணியழந் திருத்தும் பேதாய்
முற்றிமை சொல்லி னங்கை
  மூன்றுநா ளடிசில் காட்டாள்
பொற்றொடி தத்தை யீரே
  பொத்துநும் வாயை யென்றே
கற்பித்தார் பூவை யார்தங்
  காரணக் கிளவி தம்மால்,