நாமகள் இலம்பகம் |
142 |
|
261 |
வெலற்கருந் தானை நீத்த |
|
வேந்தனை வெறுமை நோக்கிக் |
|
குலத்தொடுங் கோற லெண்ணிக் |
|
கொடியவன் கடிய சூழ்ந்தான். |
|
(இ - ள்.) நிலத்தலைத் திருவனாள் தன் நீப்பருங் காதல்கூர - நிலவுலகிலே திருமகளனையாள்பால் நீக்கவியலாத தன் காதல் மிகுதலின்; முலைத்தலைப் போகம் மூழ்கி - அவளது முலையின்பத்தே அழுந்தி; வெலற்கு அருந்தானை நீத்த - வெல்ல வியலாத படைவீரரை இழந்த; முகிழ்நிலா முடிகொள் சென்னி வேந்தனை - அரும்பும் ஒளியையுடைய முடியணிந்த சென்னியுடைய வேந்தனை; வெறுமை நோக்கிக் குலத்தொடுங் கோறல் எண்ணி - தனிமை அறிந்து மகவுடனே கொல்ல நினைத்து; கொடியவன் கடிய சூழ்ந்தான் - கொடியவனான அவன் அதற்கு வேண்டும் கடிய தொழில்களைச் சிந்தித்தான்.
|
|
(வி - ம்.) நிலத்தலைத்திரு : இல்பொருளுவமை.
|
|
அரசுரிமையை இகழ்ந்து வறிய முடியொன்றையே உடையன் என்றிரங்குவார் ”போகமூழ்கி முடிகொள் சென்னி வேந்தன்” என்றார். வேந்தன் - சச்சநத்ன். குலம் என்றது கருவுற்றிருக்கும் தேவியை. கொடியவன் - கட்டியங்காரன்.
|
( 232 ) |
262 |
கோன்றமர் நிகள மூழ்கிக் |
|
கோட்டத்துக் குரங்கத் தன்கீ |
|
ழேன்றநன் மாந்தர்க் கொல்லா |
|
மிருநிதி முகந்து நல்கி |
|
யூன்றிய நாட்டை யெல்லா |
|
மொருகுடை நீழல் செய்து |
|
தோன்றினான் குன்றத் துச்சிச் |
|
சுடர்ப்பழி விளக்கிட் டன்றே. |
|
(இ - ள்.) கோன்தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்க - அரசனைச் சார்ந்தோர் விலங்கிலே அழுந்திச் சிறையிலே தாழ; தன்கீழ் ஏன்ற நல்மாந்தர்க் கெல்லாம் இருநிதி முகந்து நல்கி - தன் கீழ்மையை ஒப்பிய நல்ல மாந்தருக்கெல்லாம் பெருஞ்செல்வத்தை அள்ளிக் கொடுத்து; நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து ஊன்றிய - நாட்டையெல்லாம் தன் ஒரு குடையால் நிழல் பரப்பி ஊன்றுவதற்கு; குன்றத்து உச்சி இட்ட சுடர்ப்பழி விளக்கு இட்டுத் தோன்றினான் - குன்றின் உச்சியில் இட்ட விளக்குப்போலப் பழியாகிய விளக்கையிட்டுத் தோன்றினான்.
|
|