பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1426 

நெருப்பு என்று அஞ்சி; சிறை அன்னம் நிலத்தைச் சேரா - சிறகுகளையுடைய அன்னம் நிலத்தைச் சேராவாயின; இந்திர கோபமாம் என்று - அவற்றை இந்திர கோபம் என்று எண்ணி; இளமயில் குனிந்து குத்திச் சிந்தையில் தேம்ப - இள மயில்கள் குனிந்து குத்தி, அவை அன்மையின், நெஞ்சாலே வருந்த; திருமணி தாமே நக்க - அழகிய மணிகள் அதற்குத் தாம் நகைத்தாற் போன்று ஒளி வீசின.

   (வி - ம்.) அன்னமும் மயிலும் ஆங்கே வளர்ந்தன.

( 151 )
2529 வெள்ளைமை கலந்த நோக்கிற
  கிண்கிணி மிழற்றி யார்ப்பப்
பிள்ளைமை காதல் கூரப்
  பிறழ்ந்துபொற் றோடு வீழத்
துள்ளுபு செல¦இய தோற்றந்
  தொடுகழற் காமன் காமத்
துள்ளுயி ரறியப் பெண்ணாய்ப்
  பிறந்ததோர் தோற்ற மொத்தார்.
 

   (இ - ள்.) வெள்ளைமை கலந்த நோக்கின் - கள்ளம் அற்ற நோக்குடன்; கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப - கிண்கிணிகள் மழலை மொழிந்து ஒலிக்க; பிள்ளைமை காதல் கூர - குழந்தைத் தன்மை யான அன்புமிக ; பொன் தோடு பிறழ்ந்து வீழ - பொன் தோடு கழன்று வீழ; துள்ளுபு செலீஇய தோற்றம் - துள்ளிக்கொண்டு சென்ற தோற்றம்; தொடுகழற் காமன் - தொடுத்த கழலையுடைய காமன்; காமத்து உள் உயிர் அறிய - காமத்தின் இன்பத்தையே நுகர்ந்தறிதற்கு; பெண்ணாய்ப் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார் - பெண்ணாய்ப் பிறந்ததாகிய ஒரு தோற்றத்தைப் போன்றார்.

   (வி - ம்.) இச் செய்யுள் முதலாக வேட்கையிலாப் பருவத்தாரும். பிறக்கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாரும் என மூன்று கூறாக்கிக் கூறுகின்றார். 'பேதை அல்லை மேதையங் குறுமகள் - பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென' (அகநா. 7) என்றலின், பேதை வேட்கை பிறவாப் பருவத்தாதலும், பெதும்பை வேட்கை பிறக்கின்ற பருவத்தாதலும் பெற்றாம். இவை ஒழிந்த மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெயர்கள் வேட்கை பிறக்கின்ற பருவத்துப் பெயர்களாம். அன்றி, அவையும் பல பருவத்தை உணர்த்தும் பெயர்களெனின் : அது முதனூல்களிற் கூறாமையானும், சான்றோர் வேறுபாடு கூறாமல் மகளிர்க்குப் பொதுப் பெயராகச் செய்யுள் செய்தலானும் தேவர்க்கும் அது கருத்தன்றாம். இனி, உலாவிற்கு அங்கமாகப் புதிய நூல்களிற் கூறிய விதி இதற்காகாமையுணர்க.

   இச் செய்யுள் வேட்கை பிறவாப் பருவத்தாரைக் கூறிற்று.

( 152 )