நச்சினார்க்கினியர், 'முன்னரே' என்பதைப் பின்னுக்குக் கொணர்ந்து, 'முன்னரே நின்றார்' என்றியைப்பர். பெதும்பைப் பருவம் மங்கைப் பருவத்திற்கு முற்பட்டதாய் வேட்கை பிறக்கும் பருவமாய் நின்றதாதலின், காமனும் வேட்கை பிறப்பிக்க முன்னரே வளர்கின்றான் என்பது பொருத்தமாக இருக்கவும், பின்னுக்குக் கொண்டு வந்து கூட்டுவதன் காரணம் விளங்கவில்லை.
|
( 153 ) |