| முத்தி இலம்பகம் |
1432 |
|
|
| 2538 |
கன்னிய ராடி நோக்கித் | |
| |
தம்மைத்தாங் கண்டு நாணிப் | |
| |
பின்னவை யணிந்து செல்வா | |
| |
ரிடம்பெறா தொழிந்து போனார். | |
|
|
(இ - ள்.) விருப்பொடு விரைந்து போவான் - (சீவகனைக் காணும்) விருப்பாலே விரைந்து போதற்கு; பொன்னரி மாலை பூண்டு - பொன்னரி மாலையைக் (கழுத்திலே) பூண்டு; பூஞ்சிகை குலாவி - அழகிய கூந்தலை வறிதே முடித்து; முன்கை - மின் அரிச் சிலம்பு தொட்டு - முன் கையிலே ஒளியுடைய, பரலணிந்த சிலம்பை அணிந்து (நின்ற); கன்னியர் ஆடி நோக்கி - பெண்கள் கண்ணாடியைப் பார்த்து; தம்மைத் தாம் கண்டு நாணி - தம்மை அதிலே கண்டு நாணுற்று; பின் அவை அணிந்து செல்வார் - பிறகு, அவற்றை அணிந்து செல்கின்றவர்கள்; இடம்பெறாது ஒழிந்து போனார் - இடம் கிடையாமல் தவிர்ந்து போனார்.
|
|
(வி - ம்.) சிகையிலே சூட்டுதற்குரிய பொன்னரி மாலையைக் கழுத்திலே பூண்டு என்பது பூண்டு என்னும் வினையாற் போந்தது. அடியிலணிதற்குரிய சிலம்பை முன்கையிலிட்டு என்க. ஆடி - கண்ணாடி. பின் அவற்றை அவற்றிற்குரிய விடத்தே அணிந்து என்க.
|
( 161 ) |
| 2539 |
முத்துலாய் நடந்த கோல | |
| |
முலைமுதன் முற்ற மெல்லாம் | |
| |
வித்திய வேங்கை வீயும் | |
| |
விழுப்பொனும் விளங்கக் காமத் | |
| |
தொத்துநின் றெரிந்து கண்டார் | |
| |
கண்சுடச் சுடர்ந்து நின்றா | |
| |
ரொத்தொளிர் காம வல்லி | |
| |
யொருங்குபூத் துதிர்ந்த தொத்தார். | |
|
|
(இ - ள்.) காமத் தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுடச் சுடர்ந்து நின்றார் - காமத் தீயின் கொத்து நின்று எரிந்து சுடுதலாலே, கண்டவர் கண்களைச் சுட நின்ற மகளிர்; முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம் - முத்துக்கள் உலவி நடந்த, அழகிய முலை தோன்றற்குக் காரணமான இடம் எல்லாம்; வித்திய வேங்கை வீயும் விழுப்பொனும் விளங்க - விதைத்த வேங்கை மலரும் சிறந்த பொன்னும் போலப் பசலை விளங்குதலால்; ஒத்து ஒளிர் காமவல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார் - ஒப்புற விளங்கும் காமவல்லிகள் ஒருங்கே பூத்து உதிர்ந்தது போன்றார்.
|