| முத்தி இலம்பகம் |
1443 |
|
|
|
சூழ்ந்த - சிறந்த பொன் மதில் சூழ்ந்த; விரைவாய் பூம்பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தான் - மணம் மாறாது பொருந்திய மலர்ப்பிண்டி வேந்தனாகிய அருகன் கோயிலுக்கு எழுந்தான்.
|
|
(வி - ம்.) சங்கு முத்தை யீன்று வருத்தம் இன்றித் தானே மேயும் எனவே, தன் பிள்ளைக்குச் செவிலியாய்த் தாழை முகை வளர்க்குமென்று கருதிற்றெனத் தோன்றல்காண்க; சங்கு தாழையின் முகைக்கு உவமை. உரையிடத்தனவாகிய நகர்; 'நிலநாவின் திரிதரூஉம்' என்றாற் போல. தெய்வத்தால் அசோகு விரைமாறாமல் நிற்கும்.
|
( 181 ) |
| 2559 |
அருகு மயில்கவ வன்ன | |
| |
மேங்கக் குயில்கூவக் | |
| |
குருகு பொறையுயிர்க்குங் கொடுமுட் | |
| |
டாழை வெண்டோட்டு | |
| |
முருகு பொறையுயிர்க்கு மொய்பூங் | |
| |
காவிற் படைநீக்கித் | |
| |
திருகு கனைகழலான் செம்பொற் | |
| |
கோயில் சோ்ந்தானே. | |
|
|
(இ - ள்.) அருகு மயில் அகவ - அருகே நின்று மயில் அகவவும்; அன்னம் ஏங்க - அன்னம் ஏங்கவும்; குயில் கூவ - குயில் கூவவும்; குருகு பொறை உயிர்க்கும் - நாரை முட்டை யிடுகின்ற; கொடுமுள் தாழை வெண் தோட்டு முருகு பொறை உயிர்க்கும் மொய்பூங்காவில் - கொடிய முள்ளையுடைய தாழை தன் வெள்ளிய இதழிலே சுமந்திருந்த தேனாகிய சுமையைச் சொரியும் மலர் நிறைந்த பொழிலிலே; படைநீக்கி - படையை நிறுத்திவிட்டு; செம்பொன் கோயில் திருகு கனைகழலான் சேர்ந்தான் - அருகன் கோயிலைத் திருகிய, ஒலிக்குங் கழலணிந்த சீவகன் அடைந்தான்.
|
|
(வி - ம்.) மயிலும் அன்னமும் குயிலும் கூவக் குருகு பொறை உயிர்க்குங்கா வெனவே, குருகின்வருத்தத்திற்கு அவைகளும் வருந்தின என்பது தோன்றிற்று.
|
( 182 ) |
| 2560 |
திறந்த மணிக்கதவந் திசைக | |
| |
ளெல்லா மணந்தேக்கி | |
| |
மறைந்த வகிற்புகையான் மன்னர் | |
| |
மன்னன் வலஞ்செய்து | |
| |
பிறந்தே னினிப்பிறவேன் பிறவா | |
| |
தாயைப் பெற்றேனென் | |
| |
றிறைஞ்சி முடிதுளக்கி யேத்திக் | |
| |
கையாற் றொழுதானே. | |
|