நாமகள் இலம்பகம் |
145 |
|
266 |
புலிப்பொறிப் போர்வை நீக்கிப் |
|
பொன்னணிந் திலங்கு கின்ற |
|
வொலிக்கழன் மன்ன ருட்கு |
|
முருச்சுடர் வாளை நோக்கிக் |
|
கலிக்கிறை யாய நெஞ்சின் |
|
கட்டியங் கார னம்மேல் |
|
வலித்தது காண்டு மென்று |
|
வாளெயி றிலங்க நக்கான். |
|
(இ - ள்.) புலிப்பொறிப் போர்வை நீக்கி - புலியின் தோலாற் செய்யப்பட்ட உறையை நீக்கி; ஒலிக்கழல் மன்னர் உட்கும் பொன் அணிந்து இலங்குகின்ற உருச்சுடர் வாளை நோக்கி-ஒலிசெயுங் கழல் அணிந்த வேந்தர்கள் அஞ்சும், பொன்னால் அணிசெய்யப்பெற்று விளங்கும் ஒளிமிகும் அழகிய வாளைப் பார்த்து; கலிக்கு இறைஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம்மேல் வலித்தது காண்டும் என்று - தீமைக்கு நிலைமையான உள்ளமுடைய கட்டியங்காரன் நம்மேல் வலிமை காட்ட வந்ததைக் காண்போம் என்று; வாள் எயிறு இலங்க நக்கான் - ஒளிமிகும் பற்கள் தோன்ற நகைத்தான்.
|
|
(வி - ம்.) இது வீரத்தின்கண் எள்ளுதலாற் பிறந்த நகை.
|
|
['புலிப்பொறிப் போர்வை கவசம்' எனவும், 'ஊர்திகள் இன்மையின் கவசம் நீக்கினான் எனவும் 'போர்வை உறையும் என்ப' எனவும் நச்சினார்க்கினியர் நவில்வர்.]
|
( 237 ) |
267 |
நங்கைநீ நடக்கல் வேண்டு |
|
நன்பொருட் கிரங்கல் வேண்டா |
|
கங்குனீ யன்று கண்ட |
|
கனவெலாம் விளைந்த வென்னக் |
|
கொங்கலர் கோதை மாழ்கிக் |
|
குழைமுகம் புடைத்து வீழ்ந்து |
|
செங்கயற் கண்ணி வெய்ய |
|
திருமகற் கவலஞ் செய்தாள். |
|
(இ - ள்.) நங்கை நீ நன்பொருட்கு நடக்கல் வேண்டும் - நங்கையே ! நீ நம் நல்ல பொருளைக் காப்பதற்குச் செல்லுதல் வேண்டும்; இரங்கல் வேண்டா - இங்கிருந்து வருந்தாதே; (ஏன் எனின்); நீ அன்று கங்குல் கண்ட கனவு எலாம் விளைந்த என்ன - நீ அன்றைய இரவு கண்ட கனவுகள் எல்லாம் பயன் பட்டன என்று (மன்னன் விசயையை அணுகிக்) கூற; செங்கயற்
|
|