பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1451 

2573 பாரிடம் பரவ நாட்டி
  யவனது சரிதை யெல்லாந்
தாருடை மார்பன் கூத்துத்
  தான்செய்து நடாயி னானே.

   (இ - ள்.) தன்கண் பேரிடர் நீக்கிப் பெரும்புணை ஆய தோழற்கு - தன்னிடம் பேரிடரை நீக்கிப் பெரிய புணையாக இருந்த தோழனாகிய சுதஞ்சணனுக்கு; ஓர் இடம் செய்து - ஒரு கோயிலைக் கட்டி; அவன் உரு பொன்னால் இயற்றி - அவன் உருவத்தைப் பொன்னாற் செய்து; பாரிடம் பரவ ஊரும் நாட்டி - உலகம் வாழ்த்த ஊரும் கொடுத்து; அவனது சரிதை எல்லாம் கூத்துத் தான் செய்து - அவனுடைய வரலாற்றை யெல்லாம் கூத்தாகத் தான் அமைத்து; தார் உடை மார்பன் நடாயினான் - மாலையணிந்த மார்பனாகிய சீவகன் நடத்தினான்.

   (வி - ம்.) பேரிடர் என்றது. கட்டியங்காரனால் கொலையுண்ணலை. தனது துன்பக்கடலுக்குத் தெப்பமாகிய என்க. தோழன் : சுதஞ்சணன். இடம் - ஈண்டுக் கோயில். பாரிடம் : ஆகுபெயர். சரிதை - வரலாறு.

( 196 )
2574 ஊன்விளை யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத்
தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத்
தேன்விளை யாடு மாலை யணிந்துபொற் பீடஞ் சோ்த்தி
யான்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே.

   (இ - ள்.) ஊன் விளையாடும் வைவேல் உறுவலி சிந்தித்து - ஊன் பழகும் கூரிய வேலேந்திய மிகுவலியுடைய சீவகன் மேலும் ஆராய்ந்து; மேல்நாள் தான் விளையாடி இருந்தது. ஓர் தகை நல் ஆலை - முற்காலத்தில் தான் விளையாடியிருந்ததாகிய ஒரு தகுதியுடைய ஆலமரத்தை; தேன் விளையாடும் மாலை ஏற்ப அணிந்து - வண்டுகள் பழகும் மாலையைப் பொருந்த அணிந்து; பொன் பீடம் சேர்த்தி - பொன்னாற் பீடம் அமைத்து; ஆன் விளையாடும் ஐந்து ஊர்அதன்புறம் ஆக்கினான் - ஆக்கள் விளையாடும் ஐந்து ஊர்களை அதற்கு இறையிலி யாக்கினான்.

   (வி - ம்.) அதன் நிழலிலே ஆனிரை தங்குதலும் பால் சொரிதலும் அறமாமென்ப.

( 197 )

வேறு

2575 கொட்ட மேகம ழுங்குளிர் தாமரை
மொட்டின் வீங்கிய வெம்முலை மொய்குழ
லட்டுந் தேனழி யும்மது மாலையார்
பட்ட மெண்மரும் பார்தொழ வெய்தினார்.