(வி - ம்.) நாம் அழைப்பதற்கு முன்னே தேசிகப் பாவை வந்தாள் என்று உணர்தலின், ‘வல்லே வருக‘ என்றான். அன்றி, அநங்கமாலையை வல்லே வருக என்றானாயின், அவள் எக்காலத்து வருவாள் என்று அவள் வரவை விரும்பியிருந்தானாம். ஆகவே, அவளைத் தீண்டி ஒப்பனை செய்தலின், தனக்கு நிகழ்ந்த வேட்கையைக் கட்டியங்காரற்கஞ்சிக் கரந்திருந்து, அவன் அவளை வலிதிற் கொண்டு போதற்கும் பொறுத்திருந்தானாம். அவ்வாறாயின், அவள் வீரத்திற்கிழுக்காம்.
|
( 208 ) |