பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1464 

2595 னூன்மதர்த்த வொளிவேற்கண்
  ணார்பரவவிவ்வா றொழுகுமன்றே
வானகத்து நிலத்துமில்லா
  வண்ணமிக்க மணிப்பூணினான்.

   (இ - ள்.) நான் மருப்பின் மதயானை - நான்கு மருப்புக்களையுடைய ஜராவதத்தின் மேலே; நறிய பைந்தாமரை மடந்தையை - (உள்ள பொய்கையிலே) மணமுடைய பைந்தாமரையில் உள்ள திருமகளை; தேன் மதர்ப்பத் திளைத்தாங்கு - வண்டுகள் மகிழத் திளைத்தாற்போல; அவள் திரு இன் சாயல் நலம் கவர்ந்தபின் - அவளுடைய அழகிய இனிய சாயலாகிய நலத்தை நுகர்ந்த பிறகு; வானகத்தும் நிலத்தும் இல்லா வண்ணம் மிக்க மணிப்பூணினான் - வானிலும் நிலத்திலும் இல்லாத, அழகு மிக்க மணிக்கலத்தான்; ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ - (தம்மை நோக்கினார்) உடம்பு மதர்த்தற்குக் காரணமான, ஒளியையுடைய வேல்போலுங் கண்ணார் புகழ; இவ்வாறு ஒழுகும் - மேலும் இவ்வாறு நடப்பானாயினான்.

   (வி - ம்.) நச்சினார்க்கினியர், 'நான் மருப்பின் மதயானையென்பது, யானை யிரண்டினை யுணர்த்திற்று' என்று விளக்கங் கூறி, 'இரண்டானை பக்கத்தே நின்று நீரைச் சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகள்' என்று பொருள் கூறுவர்: 'வரிநுதல் எழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப் - புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் - திருநயந்திருந்தன்ன' (கலி. 44) என்றார் பிறரும் என மேற்கோள் காட்டுவர். அவர், மேலும், 'இனி, ஐராவதத்தின் மேலே பொய்கையாயதில் தாமரையிலே யிருக்கும் திரு என்பாருமுளர்' என்பார்,

   ஐராவதத்தின்மேற் பொய்கையில் மலர்ந்த தாமரையில் திருமகள் இருப்பதாக ஸ்ரீ புராணங் கூறும் என்பர்.1.

   வானிலும் நிலத்திலும் இல்லாதவன் என்றார் பிறன் தாரம் விரும்பாத பண்புடைமையின்.

( 118 )

வேறு

2596 நரம்புமீ திறத்தல் செல்லா
  நல்லிசை முழவும் யாழு
மிரங்குதீங் குழலு மேங்கக்
  கிண்கிணி சிலம்பொ டார்ப்பப

1.'பொலம் பூங்காவும் புனல் யாற்றுப் பரப்பும் - இலங்கு நீர்த் துருத்தியும் இளமரக்காவும் - அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி - ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த - பெருமால் களிற்று' (சிலப். 25 : 12 - 19) அரும்பதவுரை.